tamilnadu

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சிறுமியை தூக்கிச்சென்ற சிறுத்தை

கோவை, ஜூன் 20- வால்பாறை அருகே சிறுமியை தாயின் கண்முன்னே சிறுத்தை தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்ச மலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்நிலையில், வெள்ளியன்று மாலை அங்குள்ள ஜார்கண்ட்  மாநிலத்தை சேர்ந்த மணோஜ்முந்தா - மோனிகா தேவி  ஆகியோரின் மகள் குடியிருப்பு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து குழந்தை ரோசினியை கவ்வி தேயிலைத் தோட் டத்திற்குள் சென்று மறைந்துள்ளது. கண் இமைக்கும் நேரத் தில் நடந்த அந்த சம்பவத்தை நேரில் பார்த்த குழந்தையின் தாய் அலறியடித்து கதறி அழுதுள்ளார். இதையடுத்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து அந்த தேயிலைத் தோட்டத்தில் சிறுமியை தேடி  வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிபே மூலம் நூதன மோசடி

கோவை, ஜூன் 20– கோவை, தெலுங்குபா ளையத்தை சேர்ந்தவர் சக்தி வேல் (54). இவர் சங்கனூர் -  நல்லாம்பாளையம் ரோட் டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த 15 ஆம் தேதி கடையை மூடுவதற்கு தயாராகி கொண்டிருந்தார். அப்போது கடை முன்பு ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி, சக்திவேலிடம் மருத் துவ சிகிச்சை பெற அவ சரமாக ரூ.2 ஆயிரம் தேவைப் படுகிறது. கையில் பணத்தை கொடுத்தால், ஜி.பே செய்து  விடுகிறோம் என தெரிவித்த னர், உடனே ரூ.2 ஆயிரம் பணத்தை எடுத்து அந்த தம்பதியிடம் கொடுத்தார். அதனை வாங்கிக்கொண்ட அவர்கள், ஜி.பே மூலம்  பணத்தை அனுப்பி விட் டோம் என செல்போனை சக்திவேலிடம் காண்பித்த னர். அவரும் பணம் வந்துவிட் டது என நினைத்து கொண் டார். தொடர்ந்து அவர்கள் இன்னும் ரூ.2 ஆயிரம் தேவைப்படுகிறது என்றனர். அவரும் முதலில் பணம் வந் துவிட்டது என நினைத்து  கொண்டதால் அவர்கள் கேட்ட மேலும் பணத்தை எடுத்து கொடுத்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு சக்திவேல், வங்கி கணக்கை சரிபார்த்த போது, எந்த வொரு பணமும் ஜி.பே மூல மாக வரவில்லை என்பதை தெரிந்து கொண்டார். இத னால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கவுண்டம் பாளையம் போலீசில் புகார ளித்தார். இதையடுத்து தனிப் படை அமைக்கப்பட்டு, அந்த  தம்பதியை போலீசார் கைது  செய்தனர். விசாரணையில் பிடிபட்ட தம்பதி சுகுணா புரம் பழைய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த  முகமது ரிஸ்வான் (21), அவருடைய மனைவி சர்மிளா பானு (20)  என்பதும், மொத்தம் 112 பேரி டம் ரூ.2 லட்சத்துக்கும் மேல்  மோசடி செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து இருவ ரையும் போலீசார் சிறை யில் அடைத்தனர்.

மாதத் தவணையில் வீட்டுமனை தருவதாகக்கூறி பணமோசடி: அதிமுக நகரச் செயலாளர் கைது

நாமக்கல், ஜூன் 20- மாதத் தவணை முறையில் வீட்டுமனை தருவதாகக்கூறி, பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட ராசிபுரம்  அதிமுக நகரச் செயலாளரை காவல் துறை யினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த ஏ.கே.சமுத்திரம் என்ற பகுதியில் ராயல் ஹைடெக் சிட்டி என்ற பெயரில், மாதத் தவனை முறையில் வீட்டுமனை தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக அமமுக மாவட்டச் செயலாளர் ஏ.பி.பழனிவேல், அதி முக நகரச் செயலாளர் எம்.பாலசுப்ரமணி யன் மீது, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வியாழனன்று புகாரளிக்கப்பட் டது. கடந்த 2009 ஆம் ஆண்டு வீட்டுமனை தரு வதாகக்கூறி பொதுமக்களிடம் லட்சக்கணக் கில் மாதத்தவணையாக பணம் பெற்று கொண்டு இதுவரை வீட்டுமனை பத்திரப்பதிவு செய்து தராமல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் நாமக் கல் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண் காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான தனிப்படை அமைத்து, தப்பியோடிய ஏ.பி. பழனிவேல், எம்.பாலசுப்ரமணியனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.  இந்நிலையில், பாலசுப்ரமணியத்தை போலீசார் கைது செய்து, ராசிபுரம் குற்றவி யல் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, சேலம் மத் திய சிறையில் அடைத்தனர். மேலும், தலை மறைவான பழனிவேலை போலீசார் தேடி வரு கின்றனர். கைது செய்யப்பட்ட பாலசுப்பிரம ணியன், ராசிபுரம் நகர்மன்ற முன்னாள் தலை வராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டம்: இளைஞர் தற்கொலை

நாமக்கல், ஜூன் 20- ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், நாராயண நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (36). தனியார் நிறுவன பணியாளரான இவ ருக்கு ஆன்லைன் சூதாட்டம் ஆடும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் இவரது மனைவி  ராஜேஸ்வரி பலமுறை கண்டித்துள்ளார். பல  இடங்களில் கடன் வாங்கி, சூதாட்டத்தில் பணத்தை இழந்து மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பலமுறை வீட்டை விட்டு வெளியில் சென்று, இரண்டு நாட்களில் திரும்பி வந்தும் உள்ளார். கடந்த, புதனன்று வெளியே சென்றவர், வீடு திரும்ப வில்லை. இந்நிலையில், வியாழனன்று அதி காலை வீட்டுக்கு வந்து ஒரு அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டார். இவரது உடன் பணியாற்றும் நபர்கள் வந்த போதும், ராஜேஸ் வரி கதவை தட்டியும், கார்த்தி கதவை  திறக்கவில்லை. இந்நிலையில், வெள்ளி யன்று காலை வீட்டிற்கு பால் ஊற்ற வந்த  நபர், ஏணி வைத்து ஏறி உள்ளே பார்த்த போது, மின் விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் கார்த்தி இருந்துள் ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கார்த்தியை மீட்டு, குமாரபாளை யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்து வர்கள், கார்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குறித்து குமாரபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.