tamilnadu

img

திருப்பூரில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க மாணவர் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூரில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க மாணவர் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 22- திருப்பூரில் அரசு சட்டக்கல்லூரி  துவங்க வேண்டும், என இந்திய  மாணவர் சங்கம் வலியுறுத்தியுள் ளது. இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 22 ஆவது மாநாடு,  கே.எஸ்.ஆர். மண்டபத்தில் தோழர்  சீத்தாராம் யெச்சூரி அரங்கத்தில், ஞாயிறன்று நடைபெற்றது. மாவட் டத் தலைவர் க.சு.கல்கிராஜ்  தலைமை வகித்தார். வெண்கொ டியை மாவட்ட துணைச்செய லாளர் மோகனப்பிரியா ஏற்றி வைத் தார். வரவேற்புக்குழு தலைவர் ஞான சேகர் வரவேற்றார். மாநிலத் தலை வர் தௌ.சம்சீர் அகமது துவக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் சா.பிரவீன்குமார் அறிக்கையை முன் வைத்தார். வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் கே.பாலமுரளி, மாண வர் சங்க மாநில செயற்குழு உறுப்பி னர் ர.ஷாலினி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசுப்பள்ளிகள் மற்றும்  விடுதிகளில் அடிப்படை வசதிகள்  ஏற்படுத்தித்தர வேண்டும். அவி நாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளுக் குட்பட்ட கிராமப்புறங்களிலிருந்து பள்ளிக்கு சென்று வர கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும், உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவ ராக என்.விமல்ராஜ், செயலாளராக  சி.மணிகண்டன், துணைத்தலைவர் களாக ஷாலினி, காதர், ஆனந்த், பிர வீன், இணைச்செயலாளர்களாக சுஜிதா, அனுசுபாஷினி, புனிதன்,  ஜோதிபாசு உட்பட 35 பேர் கொண்ட  மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட் டது. மாணவர் சங்க மாநிலச் செயலா ளர் ஜி.அரவிந்த்சாமி நிறைவுரை யாற்றினார்.