மாநில அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டி
தருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான மாதிரி நீதி மன்றப் போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் பரிசுகளை வழங்கி னார். தருமபுரி அரசு சட்ட கல்லூரியில், தமிழ்நாட்டிலுள்ள சட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டி நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 16 சட்டக்கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 5 சுற்றுக்களாக நடைபெற்ற போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு மதுரை அரசு சட்டகல்லூரியும், சென்னை அரசு சட்டக்கல்லூரியும் தேர்வானது. அதிக புள்ளிகள் பெற்று மதுரை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர். தருமபுரி சட்டக்கல்லூரி முதல்வர் உஷா கூறுகையில், மாநில, தேசிய அளவிலான சட்டக்கல்லூரியில் போட்டிகளை நடத்த தமிழ்நாடு அரசு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சட்டக்கல்லூரி மாணவர்கள் சர்வதேச அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு அரசு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் சர்வதேச அள வில் நடைபெற உள்ள மாதிரி நீதிமன்றப் போட்டியில் தமிழ்நாடு அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்பார்கள், என்றார். இதைத்தொடர்ந்து போட்டியின் பரிசளிப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி நிர்மல்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி, தருமபுரி மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள், சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் ஜெய கௌரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.