tamilnadu

img

உயர் கல்வி மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம்

உயர் கல்வி மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம்

கோவை, ஜூன் 6– உயர் கல்விக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்ட நிர்வாகம்  சார்பில் சிறப்பு குறை தீர்ப்பு முகாம்  ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பன வர் தலைமையில் வெள்ளியன்று நடை பெற்றது. உயர் கல்விக்கான கல்விக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள், சான்றி தழ்கள் தொடர்பான பிரச்சனைகள் கல்வி ஆண்டு துவக்கத்தில் எழும். அப் போது மாணவர்கள் தீர்வைத்தேடி அங் குமிங்கும் அலைந்து கொண்டிருப்பார் கள். இந்நிலையில், இதற்கு தீர்வாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில், உயர் கல்விக்குச்செலும் மாணவர் களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு குறை தீப்பு முகாம் நடைபெற் றது. இம்முகாமில், நூற்றுக்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். உயர் கல்விக்கான கல் விக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல் கள், சான்றிதழ்கள் தொடர்பான பிரச்ச னைகள், மற்றும் பிற பல்வேறு தேவை கள் குறித்து மாணவர்கள் மற்றும் அவர் களது பெற்றோர்கள் தங்கள் கோரிக் கைகளை மனுக்களாக ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர். மாணவர்களின் கோரிக் கைகளை பொறுமையுடன் கேட்டறிந்து, அவற்றைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இம்முகாமில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, திறன் மேம்பாட்டு துறை உதவி இயக்குநர் வளர்மதி உள்ளிட்ட அரசு அலுவலர் கள் கலந்து கொண்டு, மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்த னர். உயர் கல்வி குறித்த தகவல்கள், பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத் தப்பட்டது. இந்த முகாமில் மொத்தம் 54 மாணவர்கள் தங்கள் கோரிக்கை களை மனுக்களாக வழங்கியது குறிப் பிடத்தக்கது.