tamilnadu

img

சிபிஎம் தலைமையிலான போராட்டத்தால் தீர்வு குடிநீர் விநியோகத்தில் நிலவிய சிக்கல்

சிபிஎம் தலைமையிலான போராட்டத்தால் தீர்வு குடிநீர் விநியோகத்தில் நிலவிய சிக்கல்

கோவை, ஏப்.30– கோவை, நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் குடிநீர் விநியோ கத்தில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்த நிலையில், சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் கடந்த மாதம் பொதுமக்கள் மறி யல் போராட்டம் நடத்திய நிலை யில், தற்போது புதிய பகிர்மான குழாய்களை பொருத்தி நிரந்திர தீர்வை கோவை மாநகராட்சி ஏற் படுத்தியுள்ளது. கோவை, உடையாம்பாளை யத்தை அடுத்த நஞ்சேகவுண்டன் புதூர் மேல்நிலைத்தொட்டிக்கு பில்லூர் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படுவதில்லை என்கிற புகார் தொடர்ந்து வந்தது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்றக்குழு தலைவர் வி.இராம மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சுமதி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி குடிநீர் பிரிவு அதிகா ரிகளிடம் தொடர்ந்து முறையிட்ட னர். இதுகுறித்து சிபிஎம் மாமன்ற  உறுப்பினர் வி.இராமமூர்த்தி மாமன் றத்தில் 10க்கும் மேற்பட்ட முறை இதுகுறித்து கேள்வியை எழுப்பி யிருந்தார். இருந்தபோதும், அதிகா ரிகளின் அலட்சியம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்நிலை யில், குடிநீர் பற்றாக்குறையின் கார ணமாக அவதியடைந்த பொதுமக் கள் கடந்த மார்ச் 14 ஆம் தேதி  மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இக்கட்சி யின் மாமன்ற உறுப்பினர்கள் வி. இராமமூர்த்தி, சுமதி ஆகியோரி டம் முறையிட்டனர். இதனைய டுத்து, சிபிஎம் மாமன்ற உறுப்பினர் கள் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நஞ்சேகவுண்டன் புதூர் சாலை யில் திடீர் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனைய டுத்து, காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பகிர்மான குழாயை தேவையான அளவிற்கு மாற்றம் செய்வதாக உறுதி அளித்திருந்தனர்.  இந்நிலையில், கோவை மாநக ராட்சி நிர்வாகம் தேவைக்கேற்ப புதிய பகிர்மான குழாய்களை பொருத்தி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வை ஏற்படுத்தியுள்ளது. இத னையடுத்து, புதிதாக பொருத்தப் பட்ட வால்வை திறக்கும் நிகழ்வு  செவ்வாயன்று சிபிஎம் மாமன்ற உறுப்பினர் சுமதி தலைமையில் நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலை வர் கதிர்வேல் துவக்கி வைத்தார். இதில், பேரூராட்சி முன்னாள் தலை வரும், சிபிஎம் மாமன்றக்குழு தலை வருமான வி.இராமமூர்த்தி, திமுக வட்டக்கழக செயலாளர் சுந்தரம், சிபிஐ கிட்டு (எ) கிருஷ்ணசாமி, சிபிஎம் எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே. சண்முகம், எஸ்.ரமேஷ், பால முரளி, எஸ்.சம்பத் உள்ளிட்ட பொது மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.