கிடங்கில் புகைமூட்டம்: பேரூராட்சி வாகனம் முற்றுகை
கோபி, ஏப். 23 – கோபி அருகே வாணிப்புதூர் பேரூ ராட்சி குப்பை கிடங்கிலிருந்து வெளி யேறும் புகைமூட்டத்தால் அவதியுற்ற பொதுமக்கள், குப்பை கொட்ட வந்த பேரூராட்சி வாகனத்தை முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வாணிப்புதூர் பேரூராட்சிக்குட் பட்ட 15 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆண்டியூர் ஓடை பகுதி யில் கொட்டப்பட்டு வருகின்றன. வாரச் சந்தை மற்றும் இறைச்சிக் கடைகளின் கழிவுகளும் இங்கு கொட்டப்படுவ தால், குப்பை கிடங்கு மலைபோல் குவிந்துள்ளது. குப்பையை தரம் பிரிப் பதில் ஏற்படும் தாமதம் காரணமாகவும், அடையாளம் தெரியாத நபர்கள் இரவு நேரங்களில் தீ வைப்பதாலும் குப்பை கிடங்கில் இருந்து புகைமூட்டம் வெளியேறி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. சீனிவாசநகர், அனுமன்நகர், பள் ளத்துமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய தோட்டங்களில் வசிக்கும் மக்கள் இந்த புகைமூட்டத்தால் பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேர மும் புகை மண்டலம் நிலவுவதால், அப் பகுதி மக்கள் ஆஸ்துமா, மூச்சு திண றல், தோல் நோய் போன்ற பல்வேறு உடல்நலக் குறைவுகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலை யில், புதனன்று குப்பை கிடங்கில் தீ தொடர்ந்து எரிந்ததால் ஏற்பட்ட புகை மூட்டம் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந் தது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள், குப்பை கொட்ட வந்த பேரூ ராட்சி வாகனத்தை முற்றுகையிட்டு, குப்பை கிடங்கில் ஏற்படும் புகைமூட் டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கா ததை கண்டித்து ஒரு மணி நேரத் திற்கு மேலாக வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்ற னர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.