tamilnadu

img

பனியன் மற்றும் விவசாயிகளுக்கு கடும் சிக்கல்

பனியன் மற்றும் விவசாயிகளுக்கு கடும் சிக்கல்

தங்க கடன் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

திருப்பூர், மே 23- இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்க கடன் களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கி யுள்ளது. முன்பு, அடமானம் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பில் 90% வரை கடன் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 75% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கத் தின் தரச் சான்றிதழ் உள்ளிட்ட ஒன்பது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த  புதிய விதிமுறைகள் திருப்பூர் பனியன் தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவற்றை மறுபரிசீலனை செய்யுமாறு அனைத்து தரப் பினரும் வலியுறுத்தியுள்ளனர். புதிய விதிமுறைகளின் தாக்கம் திருப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி களில் இயங்கும் ஆயிரக்கணக்கான பனியன் நிறுவனங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆடைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இந்த துறையில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள், தங்கள் அன்றாட செயல்பாடு களுக்கும், ஆடை உற்பத்தி சார்ந்த செலவுக ளுக்கும் பெரும்பாலும் தங்க நகைகளை அடகு வைத்து வங்கிகளில் கடன் பெறுவது வழக்கம். இது ஒரு பொதுவான நடைமுறையாக இருந் தாலும், ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் இத்துறையில் உள்ள சிறு தொழில்முனை வோர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளன. திருப்பூரில் பனியன் தொழில் செய்யும் சில சிறு தொழில்முனைவோர் கூறுகையில், “வங்கியில் தங்கம் அடகு வைப்பது எங்க ளின் வழக்கமான நடைமுறை. ஆனால், இப் போது கடன் வழங்கும் தொகை குறைக்கப்பட் டுள்ளது. பழைய நகைகளுக்கு ஹால்மார்க்  இல்லாததால் கடன் பெற முடியாமல் போகி றது. இதனால், அதிக வட்டி விகிதம் கொண்ட  தனியார் அடகு கடைகளை நாட வேண்டிய நிலை  ஏற்படுகிறது. வங்கியில் 90 பைசா வட்டிக்குக் கிடைக்கும் கடன், தனியார் அடகுக் கடைகளில் 2 ரூபாய் வட்டிக்குக் மேல் ஆகும். இது பணத் தேவைகளுக்காக அடமானம் வைப்பவர்க ளுக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்தும். சில  ஆர்டர்களில் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டி மீண்டும் தொழில் நடத்த தங்கம் தான் பெரு மளவு உதவும். சிறிய அளவில் இயந்திரங்கள் வைத்து தொழில் நடத்துபவர்கள், தங்கள் ஊழி யர்களுக்கு கூலி கொடுப்பதற்கும், பனியன் ஆர்டர்களுக்கு தேவையான நூல் வாங்குவதற் கும் தங்கம் அடகு வைக்கிறார்கள். புதிய கட்டுப் பாடுகளால், சிறு தொழில்முனைவோர் முன் பைப் போல் எளிதாக கடன் பெற முடியாமல் திணறுவார்கள்,” என்று வேதனை தெரிவித்த னர். விவசாயிகளுக்கும் சிக்கல் இந்த புதிய விதிமுறைகள் விவசாயிக ளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் கூறுகையில், “விவசாயிகள் பயிர் கடனுக்காக தங்க நகை களை அடகு வைப்பது வழக்கம். முன்பு ஆண் டுக்கு ஒருமுறை வட்டி செலுத்தினால் போதும். ஆனால், இப்போது முழுத் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும். இது கரும்பு, வாழை போன்ற ஆண்டுப் பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக அமையும். குடும்ப நிகழ்ச்சிகளில் தங்கத்தை அன்பளிப்பாக வாங்குவது வழக் கம். அந்த நகைகளுக்கு தரச் சான்றிதழ், ரசீது எப்படி இருக்கும்? புதிய கட்டுப்பாடுகளில் பல சிக்கல்கள் உள்ளன. 35 பைசா வட்டிக்கு கடன் பெறும் விவசாயிகளை தனியார் அடகுக் கடை களை நோக்கி இந்த புதிய விதிமுறைகள் தள் ளும். இதனால், ஏற்கனவே கடும் சிரமத்தில் உள்ள விவசாயிகளை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும்,” என்றார். கூட்டுறவு சங்கங்களில் தாக்கம்? தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் எஸ்.கே.குழந்தை சாமி கூறுகையில், “தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தற்போது சங்கமாக மாற் றப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகளுக்கு ரூ.1.50 லட்சம் வரை வட்டி இல்லாமல் ஒரு நபர் ஜாமீ னில் பயிர் கடன் வழங்கப்படுகிறது. அதற்கு  மேல் ரூ.3 லட்சம் வரை நகை கடன் வட்டி இல்லா மல் வழங்க அரசாணை உள்ளது. தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய விதிகள் பொருந்தாது. எனவே, இங்கு கடன் பெறும் விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள். ஆனால், கூட்டுறவு சங்கங்களும் ரிசர்வ்  வங்கியின் கீழ் வந்தால், பழைய நகைகளுக்கு கடன் கிடைக்காத பிரச்சனை ஏற்படும். உதார ணமாக 50 ஆண்டுகள் பழமையான நகைக ளுக்கு கூட கடன் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த  நகைகளுக்கு எந்த ரசீதும் இருக்காது,” என் றார். ரிசர்வ் வங்கியின் புதிய தங்க நகைக்கடன்  விதிகள், சிறு தொழில்முனைவோர் மற்றும்  விவசாயிகளின் நடைமுறை தேவைகளுக்கு  ஏற்ப இல்லை. மேலும், பள்ளி, கல்லூரிகள்  தொடங்கவுள்ள நிலையில், இந்தத் திருத்தங் கள் வந்துள்ளதால் மாணவ, மாணவியரின் கல்வியும் பாதிக்கப்படும் என பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர். இதனால், பலர்  தனியார் அடகுக் கடைகளை நாடி, அதிக வட்டி கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்து, பொதுமக்கள், சிறு தொழில்முனைவோர் மற் றும் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் பழைய நடைமுறையை தொடர வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். -லிவின்