அரசு நிர்வாகத்தில் ஆளுங்கட்சியினர் தலையீடு
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஜூன் 24 – அரசு நிர்வாகத்தில் ஆளுங்கட்சி யினரின் தலையீட்டைக் கண்டித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தினர் ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கொடுமுடி ஒன்றியம், கொளா நல்லி சத்துணவு மையத்தில் அமைப்பாளராகப் பணியாற்றி வந்த ஆர்.கவிதா, குழந்தைகளின் எண் ணிக்கை குறைந்ததையடுத்து ஈரோடு ஒன்றியத்திற்கு மாற்றப்பட் டார். கிளாம்பாடி நடுநிலைப்பள்ளி யில் அமைப்பாளர் பணி ஓய்வு பெற்ற போது, 25 ஆண்டுகள் பணி முடித்த கவிதாவுக்குப் பணி மாறுதல் வழங்கப்படாமல், 8 ஆண்டுகள் மட் டுமே பணிபுரிந்த மைதிலி என்பவ ருக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப் பட்டது. இதேபோல, பாசூர் மேல் நிலைப் பள்ளியில் அமைப்பாளர் ஓய்வு பெற்றபோதும் மைதிலிக்கே கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. சங்கத்தின் தலையீட்டிற்குப் பிறகு, கவிதாவுக்கு பாசூர் பள்ளிக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், ஒரு மாதமாகியும் மைதிலி பொறுப்புகளை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். மேலும், ஆளுங்கட்சியினர் கவிதாவுக்கு வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய் யுமாறு நிர்வாகத்தை வற்புறுத்தி வரு வதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஆளுங்கட்சியினரின் இத்தகைய செயல்களையும், அரசு நிர்வாகத்தில் அவர்களின் தலை யீட்டையும் தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் ஆர்.தமிழ் செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் எம்.கண்ணன் கோரிக் கைகளை விளக்கினார். அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ரமேஷ் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாநிலத் தலைவர் பி. செல்லதுரை, மாநில பொதுச் செயலாளர் ஏ.ஜெசி ஆகியோர் சிறப் புரையாற்றினர். ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அ.மலர் விழி நிறைவுரையாற்றினார். மாவட் டப் பொருளாளர் கே.பாப்பாத்தி நன்றி கூறினார். திரளான சத்துணவு ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.