சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை, ஏப்.22– தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட திருச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளரைக் கண்டித்து, நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தொழிற்சங்க கூட்டு பேர உரிமையைப் பறிப்பதைக் கண்டித்தும், தொழிற்சங்கத்தின் மீது வன்மத்துடன் சங்கக் கொடி மரங்களை அகற்றியதை தடுக்க முயன்ற சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ச.மகேந்திரன் உள்ளிட்ட திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்து மிரட் டல் விடுத்த திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணி யாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் திருச்சி கோட்டப் பொறியா ளர் கண்ணன், உதவி பொறியாளர் புகழேந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோவை மற்றும் பொள்ளாச் சியில் உள்ள கோட்டப் பொறியாளர் அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், மாநில பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ், கோட்ட நிர்வாகிகள் வெற்றிவேல், ஜெக நாதன், கே.இடும்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.