tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

உயிர் வேலிகளைப் பாதுகாக்க கோரிக்கை

உடுமலை, ஜூன் 11 - மண்ணுக்கும், மனிதனுக்கும் பல நன்மை களை செய்து வரும் இயற்கையாக வளரும்  கற்றாழை வேலிகளை பாதுகாக்கவும், அதன்  நன்மைகளை விவசாயிகளிடம் விழிப்பு ணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என  கோரிக்கை இயற்கை விவசாயிகள் எழுந்துள் ளது. விவசாய விளைநிலங்களின் எல்லை பகு தியை பாதுகாக்கும் வகையிலும் எவ்வித  தீங்கும் ஏற்படுத்தாத கற்றாழை, முள்கிழு வன், பிரண்டை மற்றும் அதிகம் வளர்ச்சி இல் லாத முள் செடிகள் இயற்கையாக வேலிக ளாக இருக்கும். இது உயிர் வேலி என்று அழைக்கப்பட்டது.

குளத்திற்கு தண்ணீர் விட கோரிக்கை

உடுமலை, ஜூன் 11- உடுமலை தாலுகா, ஆலாம்பாளையத்தில் ஆயி ரக்கணக்காண விளைநிலங் கள் பயன்படும் வகையிலும், சுற்றுவட்டார கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையில் திருமூர்த்தி அணை யில் இருந்து இக்குளத்திற்கு ஆண்டிற்கு இருமுறை தண் ணீர் விடுவது நடைமுறை யாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு   திருமூர்த்தி அணைக்கு  பிஏபி தொகுப்பு அணைக ளில் இருந்து தண்ணீர் வரும் காண்டூர் கால்வாய் பணிகள் நடைபெற்றதாலும், நீர்பி டிப்பு பகுதிகளில் போதிய மழையில்லாதது, அணை யின் நீர் குறைவாக இருந்தது உள்ளிட்ட காரணங்களால் இக்குளத்திற்கு தண்ணீர்  விடவில்லை. தற்போது அணையில் போதிய அளவு  தண்ணீர் உள்ளது. அணை யில் மற்ற குளங்களுக்கு  தண்ணீர் வழங்கப்பட்ட நிலை யில், பூசாரி நாயக்கர் குளத் திற்கு மட்டும் தண்ணீர் விட வில்லை. எனவே, இக்குளத் திற்கும் தண்ணீர் விட விவசா யிகள் வலியுறுத்தியுள்ளனர்.