சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உறவினர்கள் சாலை மறியல்
ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொளப்பலூர் பகுதி யைச் சேர்ந்த சுந்தரம் (52) என்பவர் கடந்த சனிக்கிழமை இரவு ஒட்டவலவு என்ற இடத்தில் சாலை விபத்தில் உயிரி ழந்தார். அவரது உடல் கோபி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிறுவலூர் காவல்துறையினர் இறந்தவ ரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்கான கடிதத்தை கோபி அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் வழங்கு வதற்கு நீண்ட காலதாமதம் செய்துள்ளனர். இதனால், சனிக் கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி வரை சுந்தரத்தின் உறவினர்கள் காத்திருந்தனர். காவல்துறையினர் கடிதம் வழங்க தாமதம் செய்வதை கண்டித்து, உறவினர்கள் மாலை 4 மணியளவில் கோபி-சத்தி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபி டி.எஸ்.பி. சீனி வாசன் மற்றும் காவல் ஆய்வாளர் தமிழரசு ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடற்கூறு ஆய்வுக்கான கடிதம் உடனடியாக வழங்கப் படும் என்றும், ஒரு மணி நேரத்தில் உடலை பெற்றுக் கொள்ளலாம் என்றும் காவல் ஆய்வாளர் தமிழரசு உறுதி யளித்தார். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் வாகனங்கள் மாற்று வழி யில் திருப்பி விடப்பட்டன.