உள்ளூரிலும் பொதுப்போக்குவரத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
கோவை, ஜூன் 12- பொதுப் போக்குவ ரத்தை உள்ளூரிலும் பயன் படுத்த வேண்டும் என கோவையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி வலியுறுத்தினார். கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகமும், உயிர் சாலை பாதுகாப்பு தொண்டு நிறுவனமும் இணைந்து புத்தக வெளியீடு மற்றும் ஆசிரியர் கையேடு வெளியீட்டு விழா வியாழனன்று நடை பெற்றது. உயிர் குட்டி காவலர் சாலைப் பாது காப்பு பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பயிற்சி புத்தகம் மற்றும் ஆசிரியர் கையேட்டை வழங்க, அதை மாந கராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றனர். இதனைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், சாலை விதிகளை வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பாதசாரிகளும் கடைப்பிடிக்க வேண்டும். பள்ளி பருவத்தி லேயே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்காக இத்திட்டம் உரு வாக்கப்பட்டது. ஆசிரியர்களின் முயற்சி யால் இது வெற்றி பெறும். மேலும், பொது போக்குவரத்தை உள்ளூரிலும் பயன்படுத்த வேண்டும். பாடத்திட்டத்துடன் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் முக்கி யத்துவம் அளிக்க வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.ஈஸ்வரசாமி, மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ராமச் சந்திரன், மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில், குஜராத் விமான விபத்தில் உயிரி ழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது.