கோவை:
கல்வி யாளரும், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் முன்னாள்இயக்குநருமான பேராசிரி யர் இராமகிருஷ்ணன் (வயது 80) வியாழனன்று கோவையில் காலமானார். இவரின் மறைவு செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மிகச்சிறந்த கல்வியாளரும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை ஆய்வுத் துறைத் தலைவராக இருந்தவருமான பேராசிரியர் கே.இராம கிருஷ்ணன் தொலைமுறை இயக்குநர் உள்ளிட்ட பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி உள்ளார். மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநில தலைவர், அறிவொளி இயக்க ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பணிகளில் மக்களின் அறிவியல் அறிவு வளர்ச்சிக்கு துணை நின்றவர் பேராசிரியர் இராமகிருஷ்ணன். கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் வசித்து வந்தபேராசிரியர் இராமகிருஷ்ணன் வயது மூப்பு மற்றும் உடல்நிலை ஒத்துழைக்காமை காரணங்களால்தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பலனின்றி வியாழனன்று காலமானார்.
இவரின் மறைவு செய்தியறிந்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா மற்றும் அறிவியல் இயக்க தலைவர்கள், கல்வியாளர்கள், முற்போக்காளர்கள் இரங்கல் தெரிவித்தனர்.முன்னதாக அன்னாரது உடல் நஞ்சுண்டாபுரம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் சி.பத்மநாபன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.'