மனைப்பட்டா வழங்கக்கோரி பட்டியலின மக்கள் மனு
தருமபுரி, ஏப்.28- பல ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வரும் பட்டியலின மக்க ளுக்கு மனைப்பட்டா வழங்கக்கோரி தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டி பட்டி வட்டம், அதிகாரப்பட்டி ஊராட்சிக் குட்பட்ட மாரியம்பட்டி பகுதியில், பட்டி யலின மக்கள் வசித்து வருகின்றனர். விவசாய நிலம் இல்லாத இம்மக்கள், தினக்கூலி மற்றும் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இக்கிராமத்தில் சுமார் 58 சென்ட் நிலத்தில் 26 குடும்பங் கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் 5 தலைமுறையாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இக்குடியிருப்பில் 5 அரசு தொகுப்பு வீடும் உள்ளது. ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய குடி நீர் வரி, சொத்து வரி செலுத்தி வரு கின்றனர். மின் இணைப்பும், வீட்டின் முகவரியில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை பெற்றுள்ளனர். இந்நிலையில், மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபர், அந்த நிலத்தை உரிமை கோருகிறார். மேலும், இடத்தை காலி செய்யுமாறு மிரட்டி வரு கிறார். கலைஞர் கனவு இல்லத்தில் 10 நபர்களுக்கு வீடு கிடைத்துள்ளது. இத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதை நிறுத் தும் முயறசியில் ஈடுபட்டு வருகிறார். எனவே, பட்டியலின மக்களை வெளி யேற்ற முயற்சித்து வரும் நபர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். வீடு கட்டி குடியிருந்து வரும் எங்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும், என வலியு றுத்தி அப்பகுதி மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷிடம் மனு அளித்தனர்.