பழைய முறையிலேயே நகைக்கடனை புதுப்பிக்கும் முறையை பின்பற்ற நாமக்கல் எம்.பி., கோரிக்கை
நாமக்கல், மே 16- பழைய முறையிலேயே நகைக்கடனை புதுப்பிக்கும் முறையை பின்பற்ற வேண்டும், என வலியுறுத்தி நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.மாதேஸ்வரன், ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக அந்த கடித்தத்தில் கூறி யிருப்பதாவது, தங்க நகைகளை அடகு வைத்தால் பொதுவாக தங்கள் கடன் தொகையை முழுமையாக கட்டி நகையை திருப்ப முடியவில்லை என்றால், வட்டித் தொகையை மட்டும் செலுத்தி மறு அடகு வைப்பதை வழக்கமாக பலர் வைத்துள்ள னர். இதனால் நகைக்கடன் வாடிக்கையாளர் கள் ஒரே நேரத்தில் அதிக பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படாது. ஆனால், ரிசர்வ் வங்கி கடந்தாண்டு செப்டம் பர் மாதம் வங்கிகளுக்கு சில முக்கியமான சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, நகைக்கடனை பொறுத்த வரையில் ஓராண்டு முடிவில் நகையை திருப்பி கொள்ள வேண்டும். மேலும், திருப் பிய நகையை அதே தேதியில் மறுகடன் வைக்க முடியாது. ஒரு நாள் முடிந்து அடுத்த நாள் தான் மீண்டும் புதிய நகைக்கடனை தொடங்க முடியும். இந்த அறிவிப்பால் விவ சாயிகள், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, ரிசர்வ் வங்கியின் இந்த நடை முறையை மாற்றி, பழைய முறையே பின் பற்ற ஆவண செய்ய வேண்டும், என தெரி விக்கப்பட்டுள்ளது.