மாசில்லா சேலம்: மாரத்தான் போட்டி
சேலம், ஜூன் 29- ‘மாசு இல்லாத சேலத்தை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் ஞாயிறன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. சேலம் மாவட்டம், ரெட்டியூர் பகுதியில், ஸ்ரீ ஜாத்தி ஸ்டோர்ஸ் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், 12 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 2, 5, 7 கிலோ மீட்டர்கள் என்ற அடிப்படையில், 6 பிரிவுகளாக இப்போட்டி நடைபெற்றது. ஏரிக்கரை சாலை, பெருமாள் மலை சாலை, ஐந்து ரோடு, சாரதா கல்லூரி ஆகிய சாலைகள் வழியே இப்போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு விவிடி எண்ணெய் நிறுவன மேலாளர் ஹரி பிரசாத் உள்ளிட்ட பலர் பரிசுகளை வழங்கினர்.