tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் வெற்றி பட்டா வழங்க, நில அளவீடு செய்யும் பணி துவக்கம்

மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் வெற்றி பட்டா வழங்க, நில அளவீடு செய்யும் பணி துவக்கம்

சேலம், மே 31- ஆத்தூரில் வசிப்பவர்களுக்கு பட்டா கேட்டு சிபிஎம் மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக, நில அள வீடு செய்யும் பணி நடைபெற்று வரு கிறது. சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா வில் குடியிருக்கும் வீட்டிற்கு மனைப் பட்டா கொடுக்க வேண்டும். அனுபவ  நிலத்திற்கு நிலப்பட்டா வழங்க வேண் டும், என வலியுறுத்தி கடந்த மே 26 ஆம்  தேதியன்று ஆத்தூர் வருவாய் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பின ரும், மாநிலக்குழு உறுப்பினருமான கு.சின்னதுரை உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வரு வாய் கோட்டாட்சியர், சில தினங்களில்  குடிமனை பட்டாக்கள் வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும், என உறுதிய ளித்தார். அதன் அடிப்படையில் ராம மூர்த்தி நகர், மாரிமுத்து நகர் பகுதி களில் 114 குடும்பங்களுக்கு குடிமனை  பட்டா கொடுப்பதற்காக நில அளவீடு  செய்யும் பணி சனியன்று நடைபெற்றது.  இன்னும் சில தினங்களில் பட்டா வழங் கப்படும் என வட்டாட்சியரும் உறுதி யளித்துள்ளார். இதனால் மகிழ்ச்சி யடைந்த அப்பகுதி பொதுமக்கள், பட்டா கிடைக்க போராட்டத்தில் ஈடு பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு  நன்றி தெரிவித்தனர்.