மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்
தருமபுரி, ஜூன் 23 – ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தியும், மாநில அரசு மக்கள் நல கோரிக்கை களை செயல்படுத்த வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கட்சியின் எழுச்சிகர மக்கள் சந்திப்பு இயக்கம் பல்வேறு மாவட்டங் களில் ஞாயிறன்று எழுச்சிகரமாக நிறைவு பெற்றது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் நடை பெற்ற பிரச்சார இயக்கத்திற்கு, ஒன்றிய செயலாளர் ஆ. ஜீவானந்தம் தலைமை ஏற்றார். பென்னாகரம் கிழக்கு ஒன்றியத் தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத் திற்கு, ஒன்றிய செயலாளர் ஜி. சக்தி வேல் தலைமை ஏற்றார். இதில், காவிரி உபரி நீர்த் திட்டம், தருமபுரி-மொரப்பூர் ரயில் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தரு மபுரி சிப்காட் தொழில்பேட்டை, வட்டம் தோறும் வேளாண் சார்பு தொழிற்சாலை கள் அமைக்க வேண்டும். வனத்தை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்களிலி ருந்து விவசாயிகளை நில வெளியேற் றம் செய்வதை தடுத்து நிறுத்த வேண் டும் உள்ளிட்ட உள்ளூர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த பிரச்சார இயக்கத்தில், மாநி லக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன், ஜி.சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் வி.ரவி, கே.அன்பு, எம்.வளர்மதி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். திருப்பூர் அவிநாசி ஒன்றியம், வடுகபாளை யம், நடுவச்சேரி, போத்தம்பாளையம் ஊராட்சி பகுதி பச்சாம்பளையம் கிராம பகுதி உள்ளிட்ட இடங்களில் மார்க் சிஸ்ட் கட்சியினர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பழனிசாமி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செய லாளர் ஈஸ்வரமூர்த்தி, விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் வெங்க டாசலம், விவசாய சங்க மாவட்டத் தலை வர் சண்முகம், ஊரக வளர்ச்சி உள்ளாட் சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிசாமி, உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர். ஊத்துக்குளி பிரச்சார நிறைவு பொதுக்கூட்டம் ஊத்துக்குளி தாலுகாவில் மொரட்டு பாளையத்தில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு ராஜா தலைமை வகித் தார். ரங்கசாமி வரவேற்றார். மாநில குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் ஆகி யோர் பேசினர். முன்னதாக குன்னம் பாளையத்தில் தொடங்கிய இருசக்கர வாகன பிரச்சாரம் பாப்பம்பாளையம், பெரியபாளையம் வழியாக மொரட்டு பாளையத்தில் நிறைவடைந்தது. நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங் கோடு நகரம், பள்ளிபாளையம், குமர பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த தோழர் ஆதிநாராயணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்க சாமி, எம்.கணேஷ் பாண்டியன், நகரச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குமாரபாளையம் நகரத்தில் நடை பெற்ற பிரச்சார இயக்கத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர். எம்.ஆர்.முரு கேசன் துவக்கிவைத்தார். இதில், மாவட்ட குழு உறுப்பினர். என்.சக்தி வேல், மூத்த தோழர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போன்று, பள்ளிபாளையம், ராசிபுரம், புதுச்சத்திரம், எலச்சிபாளையம், பர மத்தி வேலூர், கொல்லிமலை, உள் ளிட்ட பல்வேறு இடங்களிலும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற் றது. சேலம் மக்கள் சந்திப்பு இருசக்கர வாகனப் பிரச்சார இயக்கம் வாழப்பாடி தாலுகா கமிட்டியில் நடைபெற்றது. வாழப்பாடி தாலுகா அமைப்புக்குழு செயலாளர் வி.பழனிமுத்து தலைமையில் நடை பெற்ற இயக்கத்தில், மாநில குழு உறுப் பினர் ஏ.குமார், மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் எ.அன்பழகன் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். நங்கவள்ளியில், அரசமரம், அம் பேத்கர் நகர், காட்டம் பட்டி, கோபால புரம், பள்ளக்கானூர் வனவாசி சூரப் பள்ளி கோல்காரன் வளவு உள்ளிட்டு சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் மாநில குழு உறுப்பினர் ஏ. குமார் நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ஆர்.கிருஷ்ண வேணி உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற இயக்கத்திற்கு, ஆத்தூர் தாலுகா செயலாளர் ஏ.முருகேசன் தலைமை ஏற்றார். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்து கண்ணன், அமைப்புக்குழு உறுப் பினர் சி.மாரிமுத்து உள்ளிட்டோர் பங் கேற்று உரையாற்றினர். இதில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதி களில் மரவள்ளி கிழங்கு அதிகம் சாகு படி செய்யப்படுவதால், இங்கு சேக்கோ தொழிற்சாலை அமைக்க வேண்டும், மணல் கொள்ளை தடுக்கப்பட வேண் டும், 2006 வன உரிமை சட்டத்தை உடன டியாக அமல்படுத்தி பழங்குடியின மக் களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. கல்வராயன் மலைப்பகுதியில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு, மலை கமிட்டி செயலாளர் பாக்யராஜ் தலைமை ஏற்றார். இதில் ஒருங் கிணைப்பு குழு உறுப்பினர் எ.பொன்னு சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். கோவை அன்னூர் இடைக்குழு சார்பாக எட்டு மையங்களில் ஞாயிறன்று மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற் றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.எஸ்.கனகராஜ், அன்னூர் ஒன்றி யச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். பொள்ளாச்சி தாலுகா குழு சார் பில் கிணத்துக்கடவு மற்றும் வட சித்தூ ரில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச் சாமி, தாலுகா செயலாளர் எம்.அன்பர சன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.