உரிய விலை கிடைக்காததால், மீன்களுக்கு உணவாகும் மாம்பழங்கள்
தருமபுரி, ஜூன் 21- விலைச்சரிவு காரணமாக தரும புரியில் விவசாயிகள் மாம்பழங் களை சாலையோரங்கள் மற்றும் மீன்களுக்கு உணவாக நீர்நிலை களில் கொட்டி வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக் கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்க லம், பென்னாகரம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் மா சாகுபடி செய் யப்படுகிறது. இங்கு விளைவிக் கப்படும் மாம்பழங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர மாங்கூழ் உற்பத்தி ஆலைகளுக்கும் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நிக ழாண்டு மாங்காய் விளைச்சல் அதி களவில் இருந்ததால் சந்தையில் மாம்பழங்களின் வரத்து அதிகமாகி யுள்ளதாக விவசாயிகள் தெரி வித்துள்ளனர். இதனால் மாம்பழம் விலை மிகவும் சரிவடைந்துள்ளது. பல இடங்களில் விவசாயிகள் மாம் பழங்களை அறுவடை செய்யாமல் மரங்களிலேயே விட்டுவிட்டனர். மேலும், அறுவடை செய்த மாங் காய்கள், மாம்பழங்களை சந்தைக்கு எடுத்துச்சென்று கட்டு படியாகாத விலைக்கு விற்பனை செய்ய மனமின்றி, அவற்றை நீர்நிலைகளிலும், சாலையோரங் களிலும், வனப்பகுதியிலும் கொட்டி வருகின்றனர். மேலும், தருமபுரி, அன்னசாக ரம் பகுதியிலுள்ள ஏரியில் மாம் பழங்கள் மீன்களுக்கு உணவாக கொட்டப்படுகிறது. மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறு கையில், மொத்த விலையில் ரூ.3க்கு மாம்பழங்கள் விற்கப்படு கின்றன. மீன்களுக்கு அளிக்கப்ப டும் தீவனங்களின் விலையைவிட இவை குறைவாக இருப்பதால், மாம்பழங்களை மொத்தமாக வாங்கி மீன்களுக்கு உணவாக, நீர்நிலைகளில் வீசி வருகிறோம். மேலும், சாலையோரங்கள் வனப்பகுதிகளில் கொட்டப்ப டும் மாம்பழங்களையும் கண்ட றிந்து அவற்றையும் எடுத்துவந்து மீன்களுக்கு உணவாக்கி வரு கிறோம், என்றனர்.