போர் வெறிக்கெதிராக இடதுசாரிகள் முழக்கம்
கோவை, ஜூன் 27– இஸ்ரேல்- அமெரிக்க நாடுக ளின் போர் வெறியை கண்டித்து கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆவேச முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். உலக அமைதியை குலைத்து பாலஸ்தீனம் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை தொடுத் தது. சர்வதேச சட்டங்களை மீறி போர்வெறியுடன் செயல்பட்ட அமெ ரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் கண் டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரு கின்றன. இதன்ஒருபகுதியாக, கோவை சிவானந்தகாலனியில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் வி.தெய்வேந்திரன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சிபிஐ மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் சிவசாமி, சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாவட் டச் செயலாளர் பாலசுப்பிரமணி யன், இந்திய நட்புறவுக் கழக மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ் ணன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் இடது சாரி கட்சிகளைச் சேர்ந்த திரளா னோர் பங்கேற்றனர்.