tamilnadu

தொழிலாளர் தியாகமும், முதலாளித்துவ சுரண்டலும்

தொழிலாளர் தியாகமும், முதலாளித்துவ சுரண்டலும்

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேச்சு

கோவை, மே 2 – தொழிலாளர்களின் தியாக தால் பெற்ற உரிமைகளை ஒன்றிய மோடி அரசு, கார்ப்ரேட்டுகளின் நலன்களை பாதுகாப்பதற்காக காவு கொடுக்கிறது என கோவை மேதின விழா பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் குற்றம்சாட்டி னார். சிஐடியு, ஏஐடியுசி சார்பில் கோவை தெப்பக்குள மைதானத் தில் நடைபெற்ற மேதின பொதுக் கூட்டத்தில், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேசு கையில், சிகாகோ நகரில் 1886-ஆம்  ஆண்டு தொழிலாளர்கள் சிந்திய  ரத்தம், உலக தொழிலாளர் இயக் கத்திற்கு உத்வேகமளித்தது. 8 மணி நேர வேலை என்ற முழக்கம், உல கெங்கும் எதிரொலித்து சட்டமாகி யது. ஆனால், இன்று தொழிலா ளர்களின் உரிமைகள் மீண்டும் கேள்விக்குறியாக்கப்படுகின்றன. கார்ல் மார்க்ஸ், லெனின் போன்ற சிந்தனையாளர்கள், உழைப்பிற் கான முழு ஊதியம் தொழிலாளிக ளுக்கே கிடைக்க வேண்டும் என்ற தத்துவத்தை முன்வைத்தனர். ஆனால், இந்தியாவில் மோடி அரசு, அதானி, அம்பானி போன்ற  பெரு முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுகிறது. அவர்களின் கடன் கள் தள்ளுபடி செய்யப்படுகின் றன, வரிச்சலுகைகள் வழங்கப்படு கின்றன. இதனால், ஏற்றத்தாழ்வு கள் அதிகரித்து, தொழிலாளர் களின் ஊதியம் குறைந்து, வறுமை யும் வேலையின்மையும் பெருகு கின்றன. முதலாளித்துவத்தின் இயல்பே சுரண்டுவதுதான். 8 மணி நேர  வேலைக்காக போராடிய வர லாற்றை மறந்து, இன்போசிஸ் நாரா யணமூர்த்தி போன்றோர் 70 மணி  நேரம் வேலை செய்ய வேண்டும்  என்கின்றனர். இது, தொழிலாளர் களை மேலும் சுரண்டும் முயற்சி. பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற தொழி லாளர் விரோத சக்திகள், இந்த கருத்தை பிரச்சாரம் செய்கின்றன. தொழிலாளர் ஒற்றுமையை வலுப் படுத்தி, வர்க்க உணர்வை ஏற்ப டுத்துவது அவசியம். நவீன தாரா ளமயக் கொள்கைகளை கடை பிடிக்கும் மோடி அரசுக்கு எதிராக போராட வேண்டும். பாஜக, ஆர்.எஸ்.எஸ் மதவெறியை தூண்டி, தொழிலாளர் ஒற்றுமையை சீர் குலைக்கின்றன. அதிமுக, சுயநலத் திற்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இது, திராவிட  கொள்கைக்கும், மதச்சார்பின் மைக்கும் செய்யும் துரோகம். பாஜ கவை தோற்கடித்து, தமிழகத்தை யும் இந்தியாவையும் சமத்துவ பூமி யாக மாற்ற தொழிலாளர், விவசாயி ஒற்றுமை அவசியம். இந்த இரண்டு வர்க்கத்தையும் திரட்டி ஒரு மகத் தான சமூக மாற்றத்தை உருவாக்கு வோம், என்றார்.  முன்னதாக, இந்த பொதுக்கூட் டத்தில், ஏஐடியுசி மாநிலப் பொரு ளாளர் எம்.ஆறுமுகம், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி, ஏஐடியுசி மாவட்ட கவுன்சில் செயலாளர் சி.தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உழைப்பாளி மக்களின் நலனுக்கு விரோதமான பாஜக

பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் வேலை  நேரத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் உற்பத்தி அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. அங்கிருக்கும் முதலாளிகளுக்கு லாபம் குறையவில்லை. ஆனால் இந்தியாவில் விலை  குறைக்கப்படவில்லை. 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற உரிமையைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் ஏற்பட்டிருக்கக் கூடிய மிகப்  பெரிய ஆபத்து 3ஆவது முறையாகப் பொறுப்பேற் றுள்ள பாஜக. வெள்ளையர்கள் காலத்திலிருந்து தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற பல்வேறு உரிமைகளை சின்னாபின்னமாக்கியிருக்கிறது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை யைத் தருவோம் என்று சொன்னவர்கள் 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தனர். ஏறக்குறைய 12  மாத காலத்திற்கும் மேலாக போராடி விவசாயிகள்  அதனை திரும்பப்பெற வைத்தனர். மின்சார சட்ட  திருத்தத்தால் விவசாயிகள், சிறு குறு உற்பத்தியா ளர்கள் அனைவருக்கும் இலவச மின்சாரம் இருக் காது. எதிர்க்கட்சிகளும், பாஜகவின் கூட்டணி  கட்சிகளும் எதிர்த்ததால் அது நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில் தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கிருக்கும் தொழிலாளர் நல சட் டங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். தமிழ் நாட்டில் சாம்சங் நிறுவனத்தில் அதனைப் பார்த் தோம். நாடு முழுவதும் வர்க்க ரீதியாக தொழிலாளி, விவசாயி, கிராமப்புற உழைப்பாளி மக்களை ஒன்று திரட்டும் கடமை நம் முன் இருக்கிறது. இந்தக் கட மையை நிறைவேற்றினால் தான் இவற்றை முறிய டிக்க முடியும். நரேந்திர மோடி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடும் வகையில் வரும் 20 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் அறிவிக் கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஒன்றிய அரசின் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். தொழிலாளர், விவசாயிகள், உழைப் பாளி மக்கள், பெண்கள், மாணவர் அமைப்புகள் திரண்டு மக்களுக்கு விரோதமான மோடி அரசாங் கத்தினை அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்” என்றார்.