சத்துணவு ஊழியர் சங்க மாநில மாநாடு கோவையிலிருந்து ஜோதி பயணம்
கோவை, மே 23- திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16 ஆவது மாநில மாநாட்டில் ஏற் றப்பட உள்ள ஜோதிக்கான பயணம் கோவையில் இருந்து வெள்ளியன்று துவங்கியது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16 ஆவது மாநில மாநாடு திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிற 24,25 ஆம் தேதி நடைபெறுகிறது. இம்மாநாட்டில் ஏற்றப்படும் ஜோதி கோவை மாவட்டத்திலிருந்து துவங்கியது. கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தாமஸ் கிளப் பில் இதன் துவக்கவிழா நடைபெற்றது. தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் கே.பழனிசாமி, மாவட்டத் தலைவர் என்.பானுலதா, செயலாளர் ஏ.லதா ஆகியோர் தலைமையில் எடுத்துச் செல்லும் ஜோதி பயணத்தை வாழ்த்தி, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.மதன், செயலாளர் கே.அருணகிரி ஆகியோர் பேசினர். இதில் திரளானோர் பங்கேற்றனர். ஜோதி பயணத் திற்கு சுல்தான்பேட்டை, சூலூர் பகுதியில் எழுச்சிகர மான வரவேற்பளிக்கப்பட்டது.
குடிநீர் குழாய் உடைந்ததால், 50 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு அடித்தது
மே.பாளையம், மே 23– திருப்பூர் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்ட தால், ஐம்பதடிக்கும் மேல் தண்ணீர் பீறிட்டு அடித்தது. சாலையெங்கும் தண்ணீர் ஆறாக ஓடியதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றிலி ருந்து பல்வேறு குடிநீர் திட் டத்திற்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்திற்கு இங்கிருந்து ராட்சச குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்படு கிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ள நடூர் பகுதியில் திருப்பூருக்கு குடிநீர் கொண்டு செல்லும் ராட்சச குழாயில் உடைப்பு ஏற்பட்டு 50 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு அடித்தது இதனால் சாலை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, குடிநீர் வடி கால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்
கோவை, மே 23– அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளரும் முன் னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து வந்த கடிததத்தில், ஜூலை 30 ஆம் தேதி குண்டு வெடிப்பு நடத்தி கொலை செய்யப் போவதாகவும், ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டும், குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒரு கோடி ரூபாய் பணத்தை வைக்க வேண்டும் என்றும், இல்லையென் றால் மூன்று மாதங்களுக்குள் எஸ்.பி.வேலுமணியின் குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்றும் அச்சுறுத்தப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் கடி தம் அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மிரட்டல் தொடர்பாக கோவை மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்தில், அதிமுக வழக் கறிஞர் பிரிவு நிர்வாகிகள் புகாரளித்தனர்.
+2 தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை
நாமக்கல், மே 23- திருச்செங்கோடு அருகே சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த தால் விஷம் குடித்த மாணவி, புதனன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், சிறுமொளசியை அடுத்த வேட்டு வபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் - தீபா தம்பதியினருக்கு நட்சத்திரா (17) என்ற மக ளும், சரவணன் (11) என்ற மகனும் உள்ள னர். திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் பயின்ற மாணவி நட் சத்திரா 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந் தார். தேர்வு முடிவுகள் கடந்த மே 13 ஆம் தேதி வெளியான நிலையில், கணித பாடத்தில் நட்சத்திரா தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன் றார். வீடு திரும்பிய பெற்றோர் நட்சத்திரா விஷம் குடித்திருப்பதையறிந்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி புதனன்று உயிரிழந்தார். இதையடுத்து திருச்செங் கோடு ஊரக காவல் துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த மாணவியின் இரு கண்களையும் அவரது பெற்றோர் தான மாக வழங்க ஒப்புதல் அளித்தனர்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிவு
தருமபுரி, மே 23- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிக ளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளை யம், ராசி மணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகு திகளிலும் கனமழை பெய்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வியா ழனன்று நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்நிலையில், காவிரி நீர்ப்பி டிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்த தால், வெள்ளியன்று காலை 8 மணி நிலவரப் படி 6 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து சரிந்தது. ஆனாலும், ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ், ஐவர்பாணி உள் ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலி குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதி காரிகள் தொடர்ந்து கண்காணித்து வரு கின்றனர்.
உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
கோவை, மே 23– துணை வேந்தர் நியம னம் தொடர்பான உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கு தடை விதித்த சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பைக் கண் டித்து, கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு முற்போக்கு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறுகையில், “துணை வேந்தர் நிய மனத்தை மாநில அரசே நியமிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அந்தத் தீர்ப்புக்கு எதிராக திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத் தின் விடுமுறைக் கால அமர்வில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை நியா யமாக உயர் நீதிமன்றம் எடுத்திருக்கக் கூடாது. இது உச்ச நீதிமன்றம் அளித்திருக் கும் தீர்ப்பு. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதி ராகவும், இந்திய அரசியல் சட்டத்தை அவ மதிக்கின்ற வகையிலும், மக்களாட்சித் தத்து வத்தைக் கேலிக்குள்ளாக்குகின்ற வகையி லும், உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வு நீதிபதிகள் ஜி.ஆர். சாமிநாதன் மற் றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்தி ருக்கிறார்கள். இது மக்கள் விரோதத் தீர்ப்பாக மட்டு மல்லாமல், உச்ச நீதிமன்றத்தை அவமதிக் கிற தீர்ப்பாகவும், அரசியல் சாசனச் சட்டத் திற்கு எதிரான தீர்ப்பாகவும், இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தையே கேலிப் பொரு ளாக்குகின்ற விதமாகவும் நாங்கள் பார்க்கி றோம். இந்த பிரச்சினையை மக்கள் மன்றத் தில் எடுத்துச் செல்வதோடு, சட்டவிரோதமாக தீர்ப்பளித்திருக்கும் நீதிபதிகள் ஜி.ஆர். சாமி நாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகிய இருவரையும் உடனடியாக குடியரசுத் தலைவர் பணி நீக்கம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினர். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர் க.சு.நாகராஜ் தலைமை ஏற்றார். இதில் திராவிட தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, திராவிட தமிழர் கட்சி உள் ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இடிந்து விழுந்த அரசுக்கல்லூரி சுற்றுச்சுவர்
தருமபுரி, மே 23- கழிவுநீர் கால்வாயை தூர்வாராததால், மழைநீர் தேங்கி தருமபுரி அரசுக்கக் லூரி சுற்றுசுவர் இடிந்து விழுந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பகல் வேளைகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப் பட்டு, மாலை நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாகவும், கழிவுநீர் கால்வாய் தூர் வாராததால் அடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால் சேலம் - தருமபுரி நெடுஞ்சாலையில் வாகன ஒட்டிகள் அவதி யுற்று வந்தனர். இந்நிலையில், வெள்ளியன்று மாலை கனமழை பெய்த தால் தருமபுரி அரசு கலைக்கல்லூரி சுற்றுச்சுவர் மழை ஈரத் தின் காரணமாக சரிந்து விழுந்தது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காதவாறு கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும். மேலும், இடிந்து விழுந்துள்ள அரசுக்கல்லூரி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.