தவறவிட்ட நகையை உரியவரிடம் ஒப்படைத்த அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு பாராட்டு
தருமபுரி, ஜூன் 14- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டலத்திற்குட் பட்ட திருப்பத்தூர் - ஒசூர் வழித்தடப் பேருந்தில், ஜூன் 12 ஆம் தேதி ஓட்டு நர் சி.கவியரசு மற்றும் நடத்துநர் பி.வேலு ஆகியோர் பணியில் இருந்த னர். அப்போது பேருந்தில் ஒரு பணப்பையில் சுமார் 4.5 பவுன் தங்கச் சங் கிலி மற்றும் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. அவற்றை கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கழக அலுவலரிடம் அவர்கள் ஒப்படைத்தனா். இந்நிலையில், போச்சம்பள்ளி வட்டம், மத்தூா் அருகேயுள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணின் நகை என்பது கண்டறியப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பேருந்தில் கிடந்த நகையை அலுவலரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் கவியரசு மற்றும் நடத்துநர் வேலு ஆகியோரை, அரசு போக்குவரத்துக்கழக தருமபுரி மண்டல மேலாளர் க.செல்வம் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
சேலம், கருப்பூர் பகுதியில் செயல்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து, சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் சனியன்று 3 ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.