tamilnadu

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலர் இல்லாததால் அதிருப்தி

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலர் இல்லாததால் அதிருப்தி

திருப்பூர், ஏப்.25- விவசாயிகள் குறைதீர் கூட்டத் தில், ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலர் இல்லாததால் அதிருப்தி யடைந்த விவசாயிகள் சங்கத்தி னர் தங்களது எதிர்ப்பை வெளிப் படுத்தும் விதமாக கூட்டத்தை புறக் கணித்து வெளிநடப்பு செய்த சம் பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், விவசாயி கள் அல்லாத சிலர் பேசுவதற்கு அனுமதி அளிப்பது மற்றும் அலுவ லர்களின் பதில்களை கேட்காமல் சில விவசாய அமைப்புகள் கூட்ட மாக கூச்சலிடுவதை மாவட்ட நிர்வா கம் கட்டுப்படுத்தது, உள்ளிட்ட கார ணங்களால் அதிருப்தி அடைந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் கூட்டத்தை புறக்கணித்து வெளி யேறினர். மேலும், மாவட்ட ஆட்சி யர் மற்றும் வருவாய்த்துறை அலுவ லர் ஆகியோர் இல்லாமல் கூட்டம் தொடர்ந்ததால் விவசாயிகள் மத்தி யில் அதிருப்தி அதிகரித்தது. மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு  பிரச்சனைகளை முன்வைத்தனர். கடந்த ஆறு மாதங்களாக பல விவ சாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்றும், தாரா புரம் பகுதி விவசாயிகள் பயனடை யும் வகையில் சந்தை அமைக்க காலியிடம் இருந்தும் அலுவலர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என் றும் விவசாயிகள் வேதனை தெரி வித்தனர். அவிநாசிபாளையம் பகு தியில் விளைபொருட்களை விற் பனை செய்ய சந்தை அமைக்கப்ப டும் என்று அறிவிக்கப்பட்டும் இது வரை எந்த பணிகளும் தொடங்கப் படவில்லை என்றும் அவர்கள் சுட் டிக்காட்டினர். ரிசர்வ் வங்கி இரண்டு லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் வழங்கலாம் என்று கூறியும், திருப் பூரில் சில வங்கிகள் ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் வரை மட் டுமே வழங்குவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். பல்லப்பாளை யம் பகுதியில் கடந்த வாரம் பெய்த  மழையால் குட்டையில் நீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுவதால் போக் குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக வும், இதுகுறித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா.சா.முகிலன், கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரியில் சட்டவிரோதமாக வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவது குறித்து  சுரங்க பாதுகாப்பு இயக்குனரக அதி காரிகளுக்கு தகவலளித்தும் எந்த  நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று குற்றம் சாட்டினார்.  மேலும், மாவட்ட ஆட்சியர் கல் குவாரிகளில் யாரும் குளிக்கச் செல் லக்கூடாது என்று அறிவித்திருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு நீதி மன்றம் அனைத்து கல்குவாரிகளை யும் சுற்றி கம்பி வேலி அமைக்க உத் தரவிட்டும் அது ஏன் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியு றுத்தினார். இதன்பின்னர் சில விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. இதனால் கூட் டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதை யடுத்து மாவட்ட ஆட்சியர் பத்து நிமிடம் இடைவெளிக்குப் பின் கூட் டம் தொடரும் என்று அறிவித்தார். ஆனால், இடைவேளைக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் இல் லாமல் கூட்டம் தொடர்ந்தது. உரிய அதிகாரிகள் இல்லாமல் கூட்டம் நடத்தினால் விவசாயிகளின் குறை களை எப்படி சரி செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், விவ சாயிகள் அல்லாத சிலர் விவசாய குறைதீர் கூட்டத்தில் விவசாயம் சம் பந்தமில்லாத பிரச்சனைகளை பேசு வதையும், சில விவசாய அமைப்பு கள் அதிகாரிகளை பதிலளிக்க விடாமல் கூட்டமாக கூச்சலிடுவதை யும் மாவட்ட நிர்வாகம் கட்டுப் படுத்துவதில்லை என்றும் குற்றம் சாட்டினர். இதனால் குறைதீர் கூட் டம் பயனற்றுப் போவதாகக் கூறி  அவர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.