செயல் அலுவலர் சங்க நிர்வாகிகள் தேர்வு '
கோவை, ஜூன் 27– தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர் சங்க தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர் சங்க தேர்தலில், வி.ஜெயகுமார் தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர் சங்க மாநில பொருளாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து, கோவை மாவட்ட செயல் அலுவ லர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இதில், தலைவராக அர.பார்த்தி பன், செயலாளராக ஜெ.பெலிக்ஸ், பொருளாளராக இரா. சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
குறைந்த அளவில் ரேசன் பொருட்கள் வருவதைக் கண்டித்து போராட்டம்
சேலம், ஜூன் 27- நியாய விலைக்கடைகளுக்கு வரும் பொருட்களை உரிய அளவில் வழங்க வேண்டும், என வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து முதன்மை சங்கங்களுக்கு வரும் பொருட்களில், அரிசி 2 கிலோ முதல் 5 கிலோ வரையிலும், சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை ஆகிய பொருட்கள் ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரை எடை குறைவாக வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து பொருட்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் விடுமுறை நாட்களில் பணி வழங்கக்கூடாது, உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்ட னர். இதேபோன்று, கோவை தெற்கு சேலம், ஜூன் 27- நியாய விலைக்கடைகளுக்கு வரும் பொருட்களை உரிய அளவில் வழங்க வேண்டும், என வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து முதன்மை சங்கங்களுக்கு வரும் பொருட்களில், அரிசி 2 கிலோ முதல் 5 கிலோ வரையிலும், சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை ஆகிய பொருட்கள் ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரை எடை குறைவாக வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து பொருட்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் விடுமுறை நாட்களில் பணி வழங்கக்கூடாது, உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்ட னர். இதேபோன்று, கோவை தெற்கு
தெரு பெயர்களில் சாதி பெயர் மாற்ற கருத்துக்கேட்பு
கூட்டத்திற்கு அழைப்பு ஈரோடு, ஜூன் 27- கிராம ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்கள் மற்றும் தெருக்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர் மாற்றம் குறித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் கருத்துக்கேட்பு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி, குக்கிராமங்களில், சாலை மற்றும் தெருக் களில் உள்ள சாதி பெயர்களை நீக்கம் செய்ய முடிவு எடுக் கப்பட்டுள்ளது. அதன்படி ஆவணங்களை பரிசீலனை செய்து சாதி பெயர்களை நீக்கம் செய்வது குறித்து கிராம ஊராட்சி களில் உள்ள குக்கிராமங்கள் மற்றும் தெருக்களின் பெயர்க ளில் உள்ள சாதி பெயர் மாற்றம் குறித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஜூன் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும். எனவே, கிராம ஊராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அனைவ ரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார்.