tamilnadu

img

செத்து மிதக்கும் மீன்களால் நோய் பரவும் அபாயம்

செத்து மிதக்கும் மீன்களால் நோய் பரவும் அபாயம்

சேலம், ஜூன் 17- பூலாம்பட்டி காவிரி கரையோரப் பகுதிகளில் நான்கு நாட்களுக்கு மேலாக மீன்கள் செத்து மிதப்பதால், துர் நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி தொற்றுநோய் பர வும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த பூலாம் பட்டியில் மேட்டூரிலிருந்து காவேரி ஆறு செல்கிறது. இந்த காவிரி ஆற்றுப்பகுதியில், பூலாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மீன வர்கள் மீன்பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக மேட்டூரிலி ருந்து வரும் தண்ணீரில் மீன்கள் செத்து மிதக்கின்றன. கூடக்கல், பூலாம்பட்டி படகுத்துறை வழியாக தடுப் பணை வரை காவிரி கரையோரப் பகுதிகளில் ஏராள மான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனை பொதுமக் கள் மற்றும் மீனவர்கள் படகு மூலமாக சென்று அள்ளிச் செல்கின்றனர். அதேசமயம் காவேரி ஆற்றில் கடந்த நான்கு நாட்களாக திடீரென மீன்கள் செத்து மிதப்ப தற்கான காரணங்கள் குறித்து மீன்வளத்துறை அதிகாரி கள் ஆய்வு செய்ய வேண்டும், என்ற கோரிக்கை எழுந் துள்ளது. தொடர்ந்து மக்கள் நடமாட்டம் மிகுந்த கரை யோர பகுதி மற்றும் படகுத்துறையில் ஏராளமான மீன் கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுலாப் பய ணிகள் வந்து செல்லும் படகுத்துறையில் நாய் ஒன்று செத்து மிதக்கிறது. இதுவரை பூலாம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத னால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

மருத்துவக் காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ந.திருவரங்கன், செயலாளர் பி.சுரேஷ், பொருளாளர் சண்முகம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.