கல்வி உரிமையை பறித்த கேஎம்சிஎச் மருத்துவ கல்லூரி உரிய நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
கோவை, ஜூன் 28- மத வழக்கப்படி தாடி வைத் திருந்த மாணவனை கல்லூரியில் சேர்க்க மறுக்கும் கேஎம்சிஎச் கல் லூரி நிறுவாகம் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட் டக் குழுவின் சார்பில் செயலாளர் சி. பத்மநாபன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜுபைர் அஹ்மத் என்பவர் முது நிலை மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று கலந்துரை யாடல் மூலம் கோவை கேஎம்சி ஹெச் மருத்துவக் கல்லூரியில் இடம் தேர்வு செய்துள்ளார். அம் மாணவர் மருத்துவக் கல்லூரியில் சேர வந்த பொழுது அவரது மத வழக்கப்படி அவர் வைத்திருந்த தாடியை எடுத்துவிட்டு வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. தன்னுடைய மத வழக்கம் குறித்தும், கல்லூரி யின் சுய விவரக் குறிப்பில் இந்த நிபந்தனைகள் குறிப்பிடப்படாதது குறித்தும் அவர் விளக்கம் அளித் துள்ளார். இதன்பிறகும் நிர்வாகம் அவருக்கு அனுமதி மறுத்துள்ளது. இதன் காரணமாக அவர் அந்த படிப்பில் சேர இயலவில்லை. தங் கள் மருத்துவக் கல்லூரி நிர்வா கத்திற்கென்று தனிக் கொள்கை உள்ளதாகவும், அதன்படி தான் மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நிர்வாகம் கூறி யுள்ளது. கேஎம்சிஹெச் மருத்துவ மனையின் இத்தகைய சட்ட விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக் கிறது. இந்திய அரசியலமைப்பு பிரிவு 25, தனது மத வழக்கத்தை பின்பற்ற இந்திய குடிமக்களுக்கு உரிமை வழங்கியுள்ளது. அதன்படி இந்துக்கள், இஸ்லாமியர், கிறித் துவர் மற்றும் சீக்கியர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் மத வழக்கங் களை பின்பற்ற சட்டம் உரிமை வழங்கியுள்ளது. ஆனால் குடி மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் கேஎம்சிஹெச் நிர்வாகம் செயல்பட்டுள்ளது. அர சியலமைப்புச் சட்டத்தை மீறுகின்ற கொள்கை வடிவங்களை தனியார் நிறுவனங்கள் வகுப்பது சரியானது அல்ல. அப்படி ஒவ்வொரு தனி யார் நிறுவனங்களும் செயல்பட துவங்கினால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த முடியாது. எனவே தமிழக அரசு இந்த நட வடிக்கையில் தலையிட்டு கல்வி கற்கும் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்பட்ட கே.எம். சி.எச் மருத்துவக் கல்லூரி நிர்வாகத் தின் மீது நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். அதோடு அரசி யல் அமைப்பு சட்டத்தை பாதுகாத் திட வேண்டும். மேலும் பாதிக்கப் பட்ட மாணவருக்கு தேசிய மருத் துவ அறிவியல் தேர்வு வாரியம் 3 ஆவது கலந்துரையாடல் வாய்ப்பை வழங்க வேண்டும், இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள் ளது.
கேஎம்சிஎச் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு தாடி வைத்திருந்த காரணத்தால் மருத்துவ உயர் கல்வியை மறுத்த கேஎம்சிஎச் மருத்துவக் கல்லூரி நிர்வாகத் தைக் கண்டித்து, இந்திய மாண வர் சங்கம் மற்றும் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் இணைந்து சனியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீர் இளைஞரின் கல்வி உரிமையைப் பறித்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாணவ ருக்கு அதே கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் அல்லது மூன்றாவது கலந்தாய்வு நடத்தி வேறு கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், மாணவரிடம் கல்லூரி நிர்வாகம் பெற்ற ரூ.2 லட்சம் கட்டணத்தைத் திரும்ப வழங்க வேண்டும் அல் லது இரண்டாம் கலந்தாய்வின் போது கேஎம்சிஎச் கல்லூரியில் செலுத்திய முன்பணம் ரூ.2 லட் சத்தைப் பெற்றுத் தர தேசிய மருத்துவ கவுன்சில் ஆணையத் திற்கு தமிழக அரசு வலியுறுத்தி, அதற்கான அனைத்து உதவி களையும் செய்ய வேண்டும். கோவையில் பல கல்வி நிறு வனங்கள் தங்கள் லாப நோக்கத் திற்காக, இந்திய அரசியலமைப் புச் சட்டத்திற்கு முரணாக ஒழுக் கம் என்ற பெயரில் பல்வேறு விதி களை உருவாக்கிச் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்ப டும் கல்வி நிறுவனங்களின் விதி முறைகளை ரத்து செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தி னர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா, இந்திய மாணவர் சங்க மாவட்ட நிர்வாகி பாவேல் உள்ளிட்டோர் மேற்கண்ட கோரிக்கையை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர்.