விசைத்தறி கூலி உயர்வு பேசி தீர்க்கக்கோரி கருமத்தம்பட்டியில் நாளை சிபிஎம் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஏப்.18 - கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய் யும் விசைத்தறி உரிமையாளர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவாகவும், விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு கோரிக்கையில்ஜவுளி உற்பத்தியாளர்கள் உடனடியாக பேசித் தீர்வு காண முன் வர வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சட்டப் பாதுகாப்புடன் நெசவுக் கூலி உயர்வு வழங்கக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகங்கள் பல கட்டப் பேச்சு வார்த்தை நடத்தியும் இப்பிரச்சனையில் தீர்வு காணப்பட வில்லை. இதற்கிடையே விசைத்தறியாளர்கள் சோமனூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விசைத்தறி உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நீடித்து வரும் நிலை யில் சோமனூர், அவிநாசி, கண்ணம்பாளையம், தெக்கலூர், புதுப்பாளையம், பல்லடம் ஒன்றிய கிராமப்புற பகுதிகள் என விசைத்தறி தொழில் மையங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. எனவே விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. சட்டசபையிலும் மார்க் சிஸ்ட் கட்சி எம்எல்ஏ சின்னதுரை இது குறித்து பேசியிருக் கிறார். இந்நிலையில் ஞாயிறன்று கருமத்தம்பட்டி நால் ரோட்டில் விசைத்தறி தொழிலைப் பாதுகாக்க, கூலி உயர்வுப் பிரச்ச னைக்குத் தீர்வு காணக்கோரியும், ஜவுளி உற்பத்தியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு வழங்க முன்வர வலியு றுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், கோவை மாவட் டச் செயலாளர் சி.பத்மநாபன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி மற்றும் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.சந்திரன் ஆகி யோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேச உள்ள னர்.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என மிரட்டியவர் மீது எஸ்.பி.யிடம் புகார்
திருப்பூர், ஏப்.18 - திருப்பூர் அருகே தாராபுரத்தில் உணவக உரிமையாளரி டம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எனக்கூறி பணம் பறிக்க போனில் மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வெள்ளியன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஜாபர் சாதிக் என்பவர் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உணவ கம் கடை நடத்தி வருவதாகவும், இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி கைபேசியில் தொடர்பு கொண்ட ராஜசேகர் என்ற நபர் தன்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என தெரிவித்தார். மேலும், கடை மீது ஏராளமான புகார்கள் வருகிறது. எனவே 20 நிமிடத்தில் நிருபர்களுடன் வந்து ஆய்வு செய்து கடையை பூட்டி சீல் வைக்க உள்ளதாக மிரட்டினார். மேலும் அவர் பேசு கையில் அவர் போலியான நபர் என்று தெரியவந்தது. இதை யடுத்து உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டேன். ரூ.7 ஆயிரம் எண் கைப்பேசிக்கு அனுப்பினால் நடவடிக்கை எடுக்க மாட்டேன் என கூறினார். எனவே இது போன்ற மிரட்டல் விடுக்கும் போலி நபர்களை போலீசார் கைது செய்து கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
அவிநாசியில் வீடு வாங்கித் தருவதாக மோசடி செய்த பாஜக பிரமுகர் கைது
அவிநாசி, ஏப்.18- அவிநாசி அரசு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக மோசடி செய்த பாஜகவை சேர்ந்த நபரை போலீசார் வியாழ னன்று இரவு கைது செய்த னர். அவிநாசி செல்லாண்டி யம்மன் கோயில் வீதி சுப்பிரமணியம் மகன் நவீன்குமார் (36). பாஜகவைச் சேர்ந்தவர். இவர், அவிநாசி சோலை நகர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி 20க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 லட்சம் வரை பெற்றுக் கொண்டு வீடு வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்து அவிநாசி சூளை அருகே வசித்துவரும் ஈஸ்வரன் மனைவி ஆனந்தி அளித்த புகாரின் பேரில், அவிநாசி போலீசார் வழக்குப்ப திவு செய்து நவீன்குமாரை கைது செய்தனர்.