tamilnadu

img

‘விமான விபத்தில் பலியானவர்களுக்கு சிபிஎம் அஞ்சலி’

‘விமான விபத்தில் பலியானவர்களுக்கு சிபிஎம் அஞ்சலி’

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களுக்கு, மார்க்சிஸ்ட் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி வியாழனன்று அஞ்சலி செலுத்தினர். கோவை அவிநாசி சாலை பீளமேடு நகர குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி கூட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. அஜய்குமார், கே.மனோகரன், தீக்கதிர் பொது மேலாளர் எஸ்.ஏ மாணிக்கம், மாவட்ட குழு உறுப்பினர் பாண்டியன் , நகர குழு செயலாளர் ஏ.மேகநாதன்,  உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.