கோவை: முதல் அரசு பேருந்து பெண் நடத்துநரின்
10 ஆண்டுகால வெற்றி பயணம்!
கோவை மாவட்டத்தின் முதல் அரசு பேருந்து பெண் நடத்துநர் என்ற பெருமைக்குறிய சுமதி, வெற்றிகரமான 10 ஆவது ஆண் டிலும் பயணித்து வருகிறார். கோவை மாவட்டம், சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுமதி. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழக காவல்துறை பணியில் சேர விண்ணப்பித்து அதற்கான பயிற்சியையும் பெற்று வந்தார். இந்நிலையில், தனது குழந் தையை பார்த்துக் கொள்ள வேண் டும் என்ற கட்டாயம் ஏற்பட்டதால், காவலர் கனவை கைவிட்டுள் ளார். இதன்பின் ஏதாவது வகை யில் பொதுப்பணி சேவை பணி யில் சேர வேண்டும் என்பதற்காக அரசு பேருந்து நடத்துநர் பணிக் காக விண்ணப்பித்தார். இதற்காக அவரது குடும்பத்தினர் முழு ஆதர வையும் கொடுத்துள்ளனர். அரசு பேருந்து நடத்துனர் பணிக்கான தேர்வில் கலந்து கொண்டார். தேர்விற்கு சுமதி சென்ற போது அவருடன் 30 பெண்கள் இப்பணிக் காக விண்ணப்பித்திருந்தனர். அதில் நான்கு பேர் தேர்வு செய்யப் பட்டனர். வேலையில் சேர்ந்தவு டன் இரண்டு பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக பணியை விட் டுச் சென்றனர். ஒருவர் அலுவல கப் பணிக்காக சென்றுவிட்டார். சுமதி பணியில் சேர்ந்து பயிற்சி முடித்துவிட்டு முதல் முதலாக காந்திபுரம் - உக்கடம் வழித்தடத் தில் செல்லும் 130 எண் அரசு பேருந் தில் நடத்துநராக தனது பணியை துவங்கினார். வெறும் ஐந்து கிலோ மீட்டர் மட்டுமே செல்லும் இந்த வழித்தட பேருந்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான செயல்முறை பயிற்சியை எடுத் துக் கொண்டார். ஆரம்பத்தில் ஓட் டுநர்கள் மற்றும் பொதுமக்களும் சுமதிக்கு தங்களது ஆதரவை கொடுத்துள்ளனர். முதல் முதலாக கோவையில் ஒரு பெண் நடத்து நரை கண்டபோது பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். அதேபோல் பேருந்தில் பயணிக் கும் ஆண் பயணிகளும், தன்னு டன் பணியாற்றும் சக ஊழியர் களும் உரிய மரியாதையுடன் பாதுகாப்புடன் நடந்து கொண்ட தாக தெரிவிக்கிறார் சுமதி. இது வரை சுமதி மாநகர் மற்றும் புற நகர் என 9 பேருந்து வழித்தடங் களில் பணியாற்றியுள்ளார். இதுகுறித்து பேசிய சுமதி, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவது சவாலான ஒன் றாக இருந்தது. ஆனால், இப் போது அதெல்லாம் மாறிவிட்டது. குறிப்பாக கோவையில் மாந கர் மற்றும் புறநகர் பேருந்து வழித்தடங்களில் பணியாற்றி யுள்ளேன். பொதுமக்களும் சரி, சகப் பணியாளர்களும் சரி மரி யாதையுடன் நடந்து கொள்கின்ற னர். குறிப்பாக, காந்திபுரத்தில் இருந்து சிறுவாணி செல்லும் வழித்தடத்தில் 14பி மற்றும் 59 எண் பேருந்தில் வேலை செய் தது மிகவும் சவாலாக இருந்தது. அதிகளவு பயணிகள் வரக்கூடிய பேருந்தாகவும் இருந்தது. வேலை யில் இருந்த ஆர்வம் காரணமாக அது இனிய அனுபவமாகவே இருந்தது. அதேபோல் பெண் நடத்துநராக இந்த பணியை முழு மனதுடன் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். ஒருமுறை 2019 இல் 39 எண் பேருந்தில் சென்றபோது அவிநாசி சாலை, சித்ரா பேருந்து நிறுத்தத்தில் குடி போதையில் இருந்த நபர் ஒருவர் வேலையை செய்ய விடாமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஓட்டுநரிடம் கூறி பேருந்தை காவல் நிலையத்திற்கு திருப்பும் படி கூறினேன். இறுதி யாக போலீசார் தலையிட்டு அந்த நபரை பிடித்து பிரச்சனையை முடித்தனர். ஆனால், அவ்வளவு பெரிய பிரச்சனை ஆனபோதும் இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் யாருமே ஒன்றுமே கேட்காமல் இருந்தது மிகுந்த மன வருத் தத்தை ஏற்படுத்தியது. பொது வாக பெண்கள் ஒவ்வொரு துறை யிலும் வரவேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் சம உரிமை என்பது நிலை நிறுத்தப்படும், என்றார். -கவி