tamilnadu

img

பணியின் போது உயிரிழந்த ஊழியர் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க சிஐடியு கோரிக்கை

பணியின் போது உயிரிழந்த ஊழியர் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க சிஐடியு கோரிக்கை

கோவை, ஜூன் 23 –  கோவையில் பணியின்போது உயிரி ழந்த டாஸ்மாக் ஊழியர் மணிகண்டன் குடும்பத்திற்கு, குடும்ப பாதுகாப்பு நிதி  மற்றும் கல்வி நிதி வழங்க வலியு றுத்தி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங் கத்தினர் (சிஐடியு) திங்களன்று மாவட்ட  ஆட்சியரிடம் மனு அளித்தனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கோவை, கணேசபுரம் டாஸ்மாக் கடை யில் பணியாற்றி வந்த மணிகண்டன் என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயி ரிழந்தார். இவருக்கு கல்லூரி செல் லும் இரண்டு மகள்கள் உள்ளனர். குடும் பத்தலைவனை இழந்த குடும்பம் தற் போது ஆதரவற்ற நிலையில் உள்ளது.  இக்குடும்பத்தின் நிலை உணர்ந்து சிஐ டியுவினர் ஆட்சியரை சந்தித்து நிவா ரண நிதி வழங்க கோரிக்கை விடுத் துள்ளனர். கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழி யர் சங்க (சிஐடியு) தலைவர் ஏ. ஜான் அந்தோனி ராஜ், பொதுச்செயலாளர் கே. செந்தில்பிரபு, பொருளாளர் எஸ்.  ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் வி.  கிருஷ்ணமூர்த்தி, மற்றும் துணைச் செய லாளர் டி. செந்தில்குமார் மற்றம் குடும் பத்தினர் திங்களன்று மாவட்ட ஆட்சியர்  பவன்குமாரை நேரில் சந்தித்து அளித்த  மனுவில், கோவை மாவட்டத்தில்  உள்ள 256 டாஸ்மாக் கடைகளில் சுமார்  1,400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்  தொகுப்பூதிய அடிப்படையில் பணி யாற்றி வருகின்றனர். இருபது ஆண்டு களுக்கும் மேலாகப் பணியாற்றி வரும்  இந்த ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.10  கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டித் தரு கின்றனர். அடிப்படை கட்டமைப்பு  வசதிகள் இல்லாத நிலையிலும், டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் பி.ஓ.எஸ். விற்பனை இலக்கு  நிர்பந்தம் மற்றும் புதிய பில்லிங் முறையை அவசரகதியில் அமல்படுத் துகிறது. இப்படியான பல்வேறு கார ணங்களால் டாஸ்மாக் ஊழியர்கள் மன  உளைச்சலுக்குள்ளாகி வருகின்ற னர். தற்போது இறந்த ஊழியரின் மரண மும் அத்தகையதே. எனவே, பணி யின்போது உயிரிழந்த மணிகண்டனின் குடும்பத்திற்கு குடும்ப பாதுகாப்பு நிதி  மற்றும் கல்வி பாதுகாப்பு நிதி வழங்க  வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.