பேருந்து நிலைய கடை வாடகை அதிகம் நடைபாதையில் உணவு விற்பனை
நாமக்கல், ஏப்.28- நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில், கட்டப்பட்டுள்ள கடைகளின் வாடகை மிக அதிகமாக உள்ள நிலையில், போதிய வரு வாய் கிடைக்காது என்பதால், நடைபாதை யில், உணவு விற்பனை நடைபெறுவதால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்களாகிறது. இங்குள்ள 57 கடைகளில் பாதிக்கும் மேற்பட்டவை திறக்கப்படாமலேயே உள்ளன. 2 உணவகங் களும், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோ றும் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் நாமக் கல் புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றன. பேருந்து நிலைய வளாகத்தில், சேலம், ராசிபுரம் பேருந்துகள் நிறுத்தும் பகு தியில் உள்ள கடை உரிமையாளர்கள், பயணி கள் நடந்துசெல்லும் பாதையில் உணவ கமாக மாற்றியுள்ளனர். நடைபாதையி லேயே மக்களும் இருக்கையில் அமர்ந்து உணவருந்துகின்றனர். இதனால் அவசரக் கதியில் பேருந்தை பிடிக்க செல்வோர் சிரமத்துக்குள்ளாகின்றனர். இவ்வாறான நிலை நீடித்தால் பேருந்து நிலைய கடைகள் அனைத்தும் நடைபாதையில் மட்டுமே செயல்படும். இதனால் தேவையற்ற பிரச்ச னைகள் அதிகரிக்கக்கூடும். இதுதொடர்பாக கடை உரிமையாளர்கள் கூறுகையில், மாதம் ரூ.40 ஆயிரம் வாடகை செலுத்த வேண்டியதுள்ளது. பயணிகள் வருகை அதிகளவில் இல்லை. முதலைப் பட்டி பிரிவிலேயே பயணிகள் இறங்கி மாற் றுப்பேருந்தை பிடித்து சென்று விடுகின்ற னர். இதனால் மாத வாடகை, தொழிலாளர் களுக்கு ஊதியம் உள்ளிட்டவை வழங்குவ தற்கு கஷ்டப்படுகிறோம். கடையை விரிவாக் கம் செய்து உணவு பொருள்கள் விற்ப னையை அதிகரித்தால் மட்டுமே ஓரளவு லாபத்தை ஈட்ட முடியும். பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் தான் உணவகங்களை நடத்துகிறோம், என்றனர்.
நாமக்கல் மாவட்டம், பாச்சல் கிராமத்தில் முத்துகுமரன் கோவில் அருகே உள்ள மைதானத்தில் பொங்கல் வைத்து, வழிபட வேண்டும், எனக்கூறி 150க்கும் மேறபட்ட பெண்கள் திங்களன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.