புத்தக வாசிப்பு கருத்தரங்கம்
கோவை, ஜூன் 15– கோவை ஆடிஸ் வீதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சனியன்று “இதழியலும் புத்தக வாசிப்பும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அறிவுக் கேணி அமைப்பு மற்றும் கோயம்புத்தூர் பத்திரிக்கையா ளர் மன்றம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இதழி யல் மற்றும் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பத்திரிகையா ளர் மன்றத் தலைவர் சு. தங்கராஜா வரவேற்றார். கோவை புத்தகத் திருவிழா தலைவர் எம். ராஜேஷ் தலைமையுரை வழங்கினார். மூத்த பத்திரிகையாளர் பே. சிவசுப்பிரமணியம் மற்றும் அறிவுக்கேணி அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் சி. ஆர். இளங்கோவன் ஆகி யோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, புத்தக வாசிப்பு சமூகத்தில் அறிவு வளர்ச்சிக்கு அவசியம் என் பதை வலியுறுத்தினர். “புத்தக வாசிப்பு மொழித்திறன், சிந்தனைத் திறன், படைப்பாற்றலை மேம்படுத்தும். மன அழுத்தத்தைக் குறைத்து, புதிய கண்ணோட்டங்க ளைத் தரும். சமூகம், வரலாறு பற்றிய புரிதலை ஆழப்ப டுத்தி, வாழ்க்கைக்கான பாடங்களை வழங்கும்” என்று சிறப்பு விருந்தினர்கள் தெரிவித்தனர். பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச்செயலாளர் எஸ். ஐஸ்வர்யா நன்றி யுரை கூறினார். இந்நிகழ்வில் ஏராளமான ஊடகவி யலாளர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.