குறைந்த விலையில் வாழைத்தார்கள் ஏலம்
வாழை விவசாயிகள் கவலை
மேட்டுப்பாளையம், ஆக.27- சூறாவளி காற்றால் வாழை விவ சாயம் பாதிப்பால், ஓணம் பண்டி கையை முன்னிட்டு ஏல மையத்தில் வழக்கமான விலையை விட குறைந்த விலையில் வாழைத்தார் கள் ஏலம் போவதால் வாழை விவ சாயிகள் கவலையடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விளை விக்கப்படும் நேந்திரன், செவ் வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா வாழை ரகங்கள் தமிழகம் மட்டு மின்றி அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு வருகி றது. இதில் குறிப்பாக நேந்திரன் வாழைத்தார்கள் சுமார் 80 சதவீதம் வரை கேரளம் வியாபாரிகளால் வாங்கி செல்லப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் சுற்றுவட் டாரப் பகுதிகளில் விளைவிக்கப் படும் வாழைத்தார்கள் நால்ரோடு பகுதியில் செயல்படும் வாழைத் தார் ஏல மையத்திற்கு விவசாயி களால் கொண்டு வரப்பட்டு அங்கு குவியும் உள்ளூர் மற்றும் கேரளம் போன்ற அண்டை மாநில மொத்த வியாபாரிகளுக்கு ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக் கம். ஆண்டுதோறும் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட் டத்தை கணக்கிட்டு இங்குள்ள வாழை விவசாயிகள் நேந்திரன் வாழையை அதிகளவில் பயிரிட்டு இங்கு விற்பனைக்கு கொண்டு வருவார்கள். ஆனால் கடந்த மாதம் வீசிய கடுமையான சூறைக்காற்றால் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரி டப்பட்டிருந்த பல்லாயிரக்கணக் கான வாழை மரங்கள் ஓரிரு வாரங் களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சாய்ந்து சேத மடைந்தன. இதனால் வாழைத்தார் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. முழுமையாக வளராத வாழைத்தார்கள் பெரும ளவு ஏல மையங்களுக்கு வந்ததால் பண்டிகை காலங்களில் வாழைத் தாருக்கு விலை கிடைக்கவில்லை. கேரள வியாபாரிகளின் வருகை யும் குறைந்து விட்டது. நேந்திரன் வாழைத்தார் ஓணம் பண்டிகை காலத்தில் கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விலை போகும் நிலையில், தற்போது கிலோ 30 ரூபாய் வரை ஏலம் போனது. சராசரி விலை கூட கிடைக்காததால் விவசாயிகள் கவ லையடைந்துள்ளனர். வழக்கமாக ஓணம் விழா காலங் களில் போட்டி போட்டுக் கொண்டு நேந்திரன் வாழைத்தார்களை வாங்கி செல்லும் கேரள வியாபாரி கள் இல்லாததால் நேந்திரன் வாழையின் விலையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.