2 ஆவது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
கோவை, மே 3- மே மாதம் முழுவதும் கோடை விடு முறை மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன் வாடி ஊழியர்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும். நீண்ட ஆண்டுக ளாக பணியில் உள்ள ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழகம் முழுவதும் அங்கன் வாடி ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதன்தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக சனியன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய இப்போ ராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, சனியன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவ லக வளாகத்தில், தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர்கள் மற்றும் உதவியா ளர்கள் சங்கத்தினர் மாவட்டப் பொருளா ளர் அலமேலு மங்கை தலைமையில் இரண்டாவது நாள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாலினி உள் ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் காத்திருப் புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உதகை இதேபோன்று நீலகிரி மாவட்ட ஆட் சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இயக்குநர் அலுவலகத்தில், அங்கன் வாடி ஊழியர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட னர். அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் கவிதா, உதகை பிளாக் செயலாளர் விஜயா ஆகியோர் தலை மையில் நடைபெற்ற இப்போராட் டத்தை வாழ்த்தி சிஐடியு நீலகிரி மாவட் டச் செயலாளர் வினோத் உரையாற்றி னார். தருமபுரி இதேபோன்று, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இரண்டாவது நாளாக சனியன்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மாநி லக்குழு உறுப்பினர்கள் சி.கலாவதி, ஜீ.நாகராசன், நிர்வாகிகள் ஆணஸ்ட் ்ராஜ், வெங்கட்ராமன், பெருமாள், ஆறு முகம், வெங்கடேசன் ஆகியோர் வாழ்த் திப் பேசினர். இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.லில்லிபுஷ்பம், மாவட் டத் தலைவர் ராஜம்மாள், செயலாளர் கவிதா, பொருளாளர் தெய்வாணை உட் பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் இதேபோன்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2 ஆவது நாளாக அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நி லையில், சனியன்று நடைபெற்ற போராட்டத்தில் சேந்தமங்கலம் அங் கன்வாடி மைய உதவியாளரான, ராசா கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி (35) என்பவரை தேள் கொட்டியதால், நாமக்கல் அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அங்கன்வாடி மையப் பணியா ளர்களான சத்தியவதி (49), லட்சுமி (50), நீலாமணி (48) ஆகியோர், நெஞ்சுவலி மற்றும் வெயில் தாக்கம் காரணமாக மயக்கமடைந்து விழுந்தனர். இதைய டுத்து சிகிச்சைக்காக 3 பேரும் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். சேலம் இதேபோன்று, சேலம் நாட்டாமை கழகம் கட்டிட வளாகத்தில இரண்டா வது நாளாக அங்கன்வாடி ஊழியர் சங் கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம்.சரோஜா, மாவட்டச் செயலாளர் மனோன்மணி உட்பட பலர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.