tamilnadu

img

அன்னூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பாதுகாத்திட கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் பயனாளி அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக திங்கள் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடவாசல் பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலையைக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக குடவாசல் வடக்கு-தெற்கு மற்றும் குடவாசல் நகர  விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் எஸ்.ஆனந்தன், பி.சுப்பிரமணியன், எம்.சோமு ஆகியோர் தலைமை வகித்தனர். அமைப்பின் செயலாளர்கள் த.லெனின்,பி.சந்திரகாசன், ஆர்.வி.லெனின் ஆகியோர் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்திப் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி கலந்துகொண்டு கோரிக்கை விளக்கிக் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர் குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரிடம் மனு அளித்தனர். குடவாசல் பேரூராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சுழற்சி முறையில் வேலை வழங்கியும், தொடர்ந்து 100-நாள் வேலை வழங்கிட வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் ஏற்ற தாழ்வு இல்லாமல் சட்ட கூலி ரூ.319 வழங்கிட வேண்டும், 100 நாள் வேலை செய்யும் இடத்தில் குடிநீர்,முதல் உதவி பெட்டி, குழந்தைகள் பாதுகாப்பு வசதி செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.