பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் அதிமுக
பாரதியார் பல்கலைக்கழகத் திற்கு நிலம் வழங்கிய விவசாயி களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து போராட் டம் நடத்தி வருகிற நிலையில், இந்த விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் வகையில் சட்ட மன்றத்தில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ள தற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் கோவை மாவட் டத்தலைவர் வி.பி.இளங்கோவன், செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிறுப்பதாவது, 1980 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக் கழகம் அமைக்க கோவை மாவட் டத்தில் உள்ள வடவள்ளி, சோமை யாம்பாளையம், பொம்மன் பாளை யம், கல்வீரம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 600 சிறு குறு விவசாயிகளிடம் இருந்து 926 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது. அதற்கான இழப்பீடு தொகை மிக குறைவாக இருந்ததால் விவசாயிகள் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 25 ஆண்டுகள் வழக்கு நடைபெற் றது. 2012 ஆம் ஆண்டு அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில், விவசா யிகள் சங்க மாநிலச் செயலா ளர் பெ.சண்முகம் ஆகியோர் தலை மையில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து எங்கள் நிலம் எங்கள் உரிமை என்றும், பணம் கொடு அல்லது நிலத்தை கொடு என்ற கோரிக்கை வைத்து பெரிய போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து 3 மாதத்திற்குள் பணம் தருவதாக அன்றைய அதி முக அரசு ஒப்புக்கொண்டது. அதன் பிறகு பிரச்சனையை அரசு கண்டு கொள்ளவில்லை. பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் உட்பட 250 பேர் கைது செய்யப்பட்ட னர். அதன் பிறகு 2007ஆம் ஆண்டு கோவை மாவட்ட நீதிமன்றம் வழங் கிய தீர்ப்பின்படி சுமார் 160 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு அரசு கொடுக்க வேண்டும். முதல் தவணை என்று சொல்லி 43 கோடி ரூபாய் அன்றைய அரசு விவசாயி களுக்கு கொடுத்தது. அதன் பிறகு தமிழக அரசு ஏழை விவசாயிக ளுக்கு எதிராக மேல்முறையீடுக்கு சென்றது. 10 ஆண்டுகள் வழக்கு நடந்து 2022 ஆம் ஆண்டு கீழ் நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. தற் போது நீதிமன்ற தீர்ப்பின்படி வட்டி சேர்த்து சுமார் 350 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்க வேண் டும். பலமுறை தமிழ்நாடு அரசு மற்றும் அமைச்சர்களிடம் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் இழப்பீடாக 160 கோடி ரூபாய் மட்டுமே வழங்க வேண்டும் என கூறியுள்ளது. இதுபோதுமான தல்ல, நீதிமன்ற தீர்ப்பின்படி உரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதற்கிடையில், அதிமுக ஆட்சி காலத்தில் இக்கோரிக்கையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக விவசாயிகள் பாதிக்கின்ற வகையில், 16- 2-2019 கோட்டாட்சியர் 30 கோடியே 84 லட்சத்து 30 ஆயிரத்து 663 ரூபாய் இழப்பீடு வழங்க பரிந்துரைத் துள்ளதை, அதிமுக கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம் மன் அர்ஜூனன் உள்ளிட்ட எம்எல் ஏக்கள் கையெழுத்திட்டு ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து குழப்பும் பணியை அதிமுக சட்டமன்ற உறுப் பினர்கள் செய்துள்ளனர். இதனை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. எனவே, சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுத்து 45 ஆண்டுகால விவசாயிகளின் துயரை போக்க வேண்டும் என தமிழ்நாடு அர சையும் முதல்வரையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது என அதில் தெரிவித் துள்ளனர்.