tamilnadu

img

சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய் - சிபிஎம் ஆவேசம்

கோவை மாநகராட்சி நிர்வாகம் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் படி  சொத்து வரி உயர்வை பல மடங்கு உயர்த்தியுள்ளது. மேலும், மாநகரத்தின் பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், கோவை மாநகர குடிநீர் விநியோகத்தை சூயஸ் என்ற அயல்நாட்டு தனியார் நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு சார்பில் வியாழனன்று தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர். நடராஜன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே. மனோகரன், கே. அஜய் குமார், யூ. கே. சிவஞானம், என். ஆர். முருகேசன், என். ஆறுச்சாமி, வி. தெய்வேந்திரன் உள்ளிட்ட கட்சி அணியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;