tamilnadu

img

ஜனநாயகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய முழக்கம் - பி.ஆர்.நடராஜன்,

பிரதான் மந்திரி சதன்மே ஆவோ...

கோவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பத்தாண்டுகளாக நாடாளுமன்ற உறுப் பினராக இருக்கிற இந்த அனுபவத்திலும், என்னுடைய அரசியல் அனுபவத்திலும் பிரதான் மந்திரி சதன்மே ஆவோ (பிரத மரே அவைக்கு வாருங்கள்) என்கிற முழக் கத்தை இப்போதுதான் முதன்முறையாக கேட்கிறேன். இது நம் நாட்டின் ஜனநாய கத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவாக கருது கிறேன் என நமது தீக்கதிர் நாளிதழின் சுதந்திர தின சிறப்பிதழுக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் அளித்த பேட்டியில் தெரிவித்துள் ளார்.

மேலும் அவர் கூறுகையில், அறுதிப் பெரும்பான்மை என்பதை மோடி தலைமை யிலான பாஜக அரசு தவறாக புரிந்து கொண் டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் யப்படுகிற மசோதாக்கள் மீது கூடுதலான விவாதங்களும், எதிர்மறையான கருத்துக் களையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த எதிர்மறையான கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதல்ல. மாறாக இந்த விவாதங்களில் நல்ல கருத்துக்கள் வந்தால் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆளும் அரசுக்கு இந்த நோக்கம் வேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சி யில் முன்மொழியப்பட்டு சட்டமாக்கப்படும் மசோதாக்கள் அனைத்தும் எந்த விவாதமும் இன்றியே சட்டமாக்கப்படுகிறது. மசோதாக் கள் மீது நடத்தப்படுகிற விவாதங்கள்தான் சம் பந்தப்பட்ட சட்டத்தின் முழு விபரங்கள் வெளிக் கொணர முடியும். ஆனால், இது நடைபெ றுவது இல்லை.  இந்த போக்குகளை கண்டு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியே கவலை கொண்டுள்ளார். இதுகுறித்து அவர்கள் வெளிப்படுத்திய கருத்தில், நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப்படுகிற சட்டங்கள் எந்த  விவதமுமின்றி நிறைவேற்றப்படுவது ஆரோக்கியமானதல்ல. இதுபோன்ற சட் டங்கள் ஏன் கொண்டு வரப்பட்டது என்பது குறித்த விவாதங்கள் இல்லாத தால், எங்களுக்குத்தான் கூடுதல் சுமை ஏற்படு கிறது என வெளிப்படையாக தெரிவித்துள்ள னர். ஆனால், இதுகுறித்து மோடி அரசுக்கு எந்த  கவலையும் கிடையாது என்பது அடுத்தடுத்த மசோதாக்கள் எவ்வித விவாதமும் இன்றி நிறை வேற்றப்படுவதில் இருந்து இதனை புரிந்து கொள்ள முடியும். குறைந்தபட்சம் எதிர்மறை கருத்துக்கள் என்ன வருகிறது என்பதை காது கொடுத்து கேட்பதற்கு கூட அவர்கள் தயா ரில்லை.

நான் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப் பினராக இருந்து உள்ளேன். இந்த இரண்டு காலத்திலும், வெளி நடப்பு, கூச்சல் குழப்பம் எல்லாம் இருந்து உள்ளது என்றாலும், அது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவ டிக்கையில் ஒன்றாக இருந்தது. கடந்த காலங் களில் எந்த மசோதக்கள் தாக்கல் செய்யப் பட்டாலும், அதன் மீது முழு விவாதம் நடத்தப் படும், நிலைக்குழுவிற்கோ, செலக்ட் கமிட் டிக்கோ அனுப்பப்படும். இதில், தவறு இருந் தால் அரசு அதனை சரிசெய்து கொள்ள பயன் படுத்திக்கொள்ளும். தற்போது மோடி அரசின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் இவை  அனைத்தும் புறக்கணிப்புக்கு உள்ளாகியுள் ளது. தங்களிடம் உள்ள கூடுதலான பெரும் பான்மையை பயன்படுத்தி எவ்வித விவாத மும் இன்றி சட்டங்கள் இயற்றப்படுகிறது.  இதனை இடதுசாரிகள் மட்டுமன்றி அறிவு ஜீவிகள், அரசியல் நோக்கர்கள் எதிர்க்கின்ற னர். இது தனி மனித சர்வாதிகாரத்தை நோக்கி  நாடு தள்ளப்படுவதாக கவலை கொள்கின்ற னர். மேலும், கடந்த காலங்களில் ஆண்டுக்கு  நூறு நாட்கள் நாடாளுமன்ற கூட்டம் நடை பெறும். அது இப்போது 60 நாட்கள் நடைபெறு வதே அரிதானதாக மாறியுள்ளது.  மேலும், இவர்கள் வேறு ஒரு தந்திரத்தை யும் கையாள்கிறார்கள். நாடாளுமன்ற கூட்டத் தொடர் துவங்கும் ஓரிரு நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு பிரச்சனையை கிளப்புவது, அது  குறித்து விவாதம் வேண்டும் என்று நாடாளு மன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகள் கேட் டால், இதனையே அவர்களுக்கு கிடைத்த நல் வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு அவை நட வடிக்கையை முடக்குவது, அவைக்கு பிரதமர் வராமல் தவிர்ப்பது போன்ற தந்திரங்களை கையாள்கிறார்கள்.

ஒன்றிய அரசாங்கத்தின் தலைவர் பிரதமர்  மோடிதான், ஆனால், அவர் நாடாளுமன்ற கூட் டத்தொடரின் முதல் ஐந்து நிமிடம், கூட்டத் தொடரின் நிறைவு நாளில் ஐந்து நிமிடம் மட்டும் தான் அவர் தனது இருக்கையில் அமர்ந்தி ருப்பார். ஒன்றிய நிதிநிலை அறிக்கையை நிதி  அமைச்சர் தாக்கல் செய்கிறார் என்றால், அது  வாசித்து முடிக்கிற வரையில் இரண்டு மணி நேரம் மட்டும் உள்ளே அமர்ந்திருப்பார். அதன் பிறகு மோடி நாடாளுமன்ற அவைக்குள் ளேயே வருவதில்லை. அரசாங்கத்தின் தலை வராக இருந்து கொண்டு, நாடாளுமன்ற அவை யில் நடைபெறும் விவாதங்களை மோடி கேட் பதே இல்லை. என்னுடைய அனுபவத்தில், பிரதான் மந் திரி சதன்மே ஆவோ (பிரதமரே அவைக்கு  வாருங்கள்) என்கிற முழக்கங்களை  இப்போதுதான் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க கேட்டு இருக்கிறேன். இதற்கு  முன்பு இந்த முழக்கத்தின் அவசியமே  இருந்ததில்லை. பிரதமர்கள் அனைவரும்  நாடாளுமன்றத்திற்குள் வருவார்கள், உறுப் பினர்களின் விவாதங்களை காது கொடுத்து  கேட்பார்கள். அவசியம் என்றால் பதில் சொல் வார்கள். ஆனால், மோடி அவைக்கு வரவே மறுக்கிறார் என்பதால், பிரதான் மந்திரி  சதன்மே ஆவோ என்று நாடாளுமன்ற உறுப் பினர்கள் குரல் எழுப்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இது இந்திய நாட்டின் ஜனநா யகத்திற்கு ஏற்பட்டிருக்கிற தலைகுனிவாகவே  பார்க்கிறேன்.

தானே அனைத்திற்கும் மேலானவன் என் கிற அகந்தையோடு, நாடாளுமன்றத்திற்கு உள்ளே வருவதும், அவைக்கு வராமல் தவிர்ப் பதும், புறக்கணிப்பதும் வாடிக்கையாக மோடி  வைத்துள்ளார். 2014ல் பாஜக வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் மோடி வருகையில், நாடாளுமன்ற படிக்கட்டுகளை விழுந்து கும்பிட்டு உள்ளே வந்த ஏற்பாட்டை இப்போது பார்க்கையில், அது முழுக்க போலித்தனமா னது. அப்பட்டமான நாடகம் என்பதை இப் போது மக்கள் உணர்ந்து கொண்டனர். நாடா ளுமன்றத்திற்குள்ளேயே வராத பிரதமர் எதற்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து  புதிய நாடாளுமன்றம் கட்டினார் என்கிற கேள்விகளை இப்போது மக்களே எழுப்ப துவக்கிவிட்டனர். ஜனநாயகத்தின் மீது நம் பிக்கை இல்லாத அரசு, விவாதங்களே நடத்தக் கூடாது என்று நாடாளுமன்றத்தையே முடக்கு கிற அரசாக இந்த மோடி அரசு உள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை நாடாளுமன்றத் திற்குள்ளே அமர்ந்து கொண்டே அதற்கு குழி  பறிக்கிற வேலையை மோடி தலைமையிலான பாஜக அரசு செய்து வருகிறது. இதேபோன்று எந்த அமைச்சர்களும் சுய மாக முடிவெடுக்கிற அமைச்சர்களாக இல்லை  என்பது கண்கூடு. ஆர்எஸ்எஸ் மையம் என்ன  சொல்கிறதோ, அதனை அப்படியே செய்பவர் களாகத்தான் ஒன்றிய பாஜக அமைச்சர்கள் இருக்கின்றனர்.  மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடை பெறுகிறது. மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் நூறு நாட்களை கடந்தும் கலவரம் தொடர்கி றது. 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக விவ ரங்கள் வருகிறது. பல்லாயிரக்கணக்கானோர் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக்கப் பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள னர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரை யாக்கப்பட்டுள்ளது. பாஜகவின் ஒன்றிய அமைச்சர், எம்எல்ஏக்கள் தாக்குதலுக்கு உள் ளாகியுள்ளனர். இதற்கு காரணமான மணிப் பூர் முதல்வரை பதவி விலக்க வேண்டும் என் கிற குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. பாஜகவின் மணிப்பூர் சட்டப்பேரவை உறுப் பினர்களே முதல்வர் பதவி விலக வேண்டும் 

, நாடாளுமன்றத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ, ஒன்றிய அரசு சொல்வதை அவர் செய்து வருகிறார். ஆகவே அவர் பதவி விலக வேண்டிய அவசிய மில்லை என்கிறார். இது அவர் கருத்தல்ல, ஆர்எஸ்எஸ் என்ன சொல்லி இருக்கிறதோ, அதனை அப்படியே வழிமொழிபவராக அமித்ஷா இருக்கிறார்.  இந்த ஒன்றிய பாஜக அமைச்சர்கள் வாயில் இருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தைகளை யும் நுட்பமாக கவனித்தால், அதன் பின்னனி யில் ஏதோ ஒரு திட்டம் இருக்கும். அது ஆர்எஸ்எஸ் முன்னெடுத்துக்கொடுத்த வார்த் தைகளாக இருக்கும். சமீபத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அசாம் மாநிலத் திற்கு சென்று, அனைவரும் போருக்கு தயாராக வேண்டும் என்றார். அவர் சொன்ன ஓரிரு நாட்க ளுக்குள் மும்பையில், ரயில்வே போலீஸ் ஒரு வர் மூன்று இஸ்லாமியர்களை தேடித்தேடி சுட்டுக்கொன்றார். ஹரியானவில் ஒரு காவல் துறை அதிகாரியின் பேச்சு கலவரத்தீயை மூட்டி  விட்டிருக்கிறது. தமிழகத்தில் கூட இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழு வதும் இதுபோன்ற வெறியூட்டும் நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இப் போது, நாடளுமன்றத்திற்குள் அமித்ஷா பேசு கையில், இது டிரெய்லர்தான் இன்னும் நிறைய உள்ளது என்கிறார். ஒன்றிய அரசின் மூத்த  அமைச்சர் அமித்ஷா இதுபோன்ற வார்த்தை களை சொல்கிறார் என்றால், இது வெறும் வார்த்தை தானே என தவிர்த்துவிட்டு போக முடியாது. இதன் பின்னனியில் வேறு பல திட் டங்கள் இருக்கக்கூடும்.

அண்மையில், தில்லி அரசுக்கு அதிகாரி களை நியமிப்பது தொடர்பான உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில், நீண்ட விசாரணைக்கு பிறகு அரசியல் சாசன பெஞ்ச், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரிகளை நியமிக்கும் உரிமம் உள்ளது  என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை நடை முறைப்படுத்துவதற்கு மாறாக, ஒன்றிய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவை தாக்கல் செய்து தில்லியில் அதிகாரிகளை நிய மிக்கும் பொறுப்பு அம்மாநில ஆளுநர் உள் ளிட்டோருக்குத்தான் இருக்கிறது என ஜனாதி பதியை பயன்படுத்தி அவசர  சட்டமாக்கப்பட்டி ருக்கிறது. இதேபோன்று, தற்போது இருக்கிற தலைமை தேர்தல் அதிகாரி நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு பத்து நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற உள்ளார். அந்த இடத்தில் தனக்கு தேவையானவர்களை போட வேண் டும் என்கிற நோக்கத்தோடு பாஜக செயல் படுகிறது. தலைமை தேர்தல் அதிகாரியை தேர்ந்தெடுக்கப்படுகிற ஏற்கனவே இருந்த  நடைமுறை தவறு என்கிற வழக்கில், தலைமை தேர்தல் அதிகாரியை தேர்ந்தெடுக்கும் குழு வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டும் என்கிற கருத்தை மறுத்து, நீதி பதிகள் தேவையில்லை, அதற்கு பதிலாக ஒன்றிய அமைச்சர்கள் அந்த குழுவில் இடம் பெறுவார்கள் என்கிற சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது. இப்படி நீதிமன்றங்களோடு மோதல் போக்கை உருவாக்கிக்கொண்டிருக் கிறார்கள். ஏற்கனவே ஊடகங்களை முழுமை யாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட் டனர். நடுநிலையோடு செயல்பட வேண்டிய சிபிஐ, என்ஐஏ, வருமானவரித்துறை போன்ற அமைப்புகள், தற்போது பாஜகவின் சேவக துறையாக மாற்றப்பட்டுள்ளது. பாஜகவிற்கு எதிரானவர்களை மிரட்ட இவ்வமைப்புகளை பயன்படுகிறது. எதிர்க்கட்சிகளை உடைத்து, அதில் இருந்து ஆள் பிடித்து பாஜகவிற்குள்  இனைக்கும் வேலையை செய்து கொண்டி ருக்கிறது. இதுபோன்ற அமைப்புகளை எந்த கூச்சநாச்சமே இல்லாமல் இவ்வமைப்புகளை பாஜக தவறாக பயன்படுதிக்கொண்டிருக்கி றது. எதிர்ப்புக்குரல் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பாஜக நினைக்கிறது. இதனைத்தொடர்ந்தே மாநிலத்தின் உரிமை கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பறித்து வருகிறது. கூட்டுறவு, மொழி போன்ற மாநி லத்தின் உரிமைகளை நேரடியாக பறிக்கி றார்கள். 

தேர்தல் அதிகாரியை தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற வேண்டும் என்கிற கருத்தை மறுத்து, நீதிபதிகள் தேவையில்லை, அதற்கு பதிலாக ஒன்றிய அமைச்சர்கள் அந்த குழுவில் இடம் பெறுவார்கள் என்கிற சட் டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படி நீதிமன்றங்களோடு மோதல் போக்கை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே ஊடகங் களை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர். நடுநிலையோடு செயல்பட வேண்டிய சிபிஐ, என்ஐஏ, வருமான வரித்துறை போன்ற அமைப்புகள், தற்போது பாஜகவின் சேவக துறையாக மாற்றப்பட்டுள்ளது. பாஜகவிற்கு எதிரானவர்களை மிரட்ட இவ்வமைப்புகளை பயன்படுகிறது. எதிர்க்கட்சிகளை உடைத்து, அதில் இருந்து ஆள் பிடித்து பாஜகவிற்குள் இனைக்கும் வேலையை  செய்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற அமைப்புகளை எந்த கூச்சநாச்சமுமே இல்லாமல் இவ்வமைப்புகளை பாஜக தவறாக பயன் படுதிக்கொண்டிருக்கிறது. எதிர்ப்புக்குரல் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பாஜக நினைக்கிறது. இதனைத்தொடர்ந்தே மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பறித்து வருகிறது. கூட்டுறவு, மொழி போன்ற மாநிலத்தின் உரிமைகளை நேரடியாக பறிக்கிறார்கள். 

வேலையின்மை, கடும் விலைவாசி உயர்வு, வறுமை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பண வீக்கம், மாநில உரிமைகளை பறிப்பது உள்ளிட்ட பாஜக அரசின் நடவடிக்கையால் நாடு கடும் நெருக்கடி யில் சிக்கியுள்ளது. இதற்கெதிரான மக்களின் ஆவேச குரலை  மதத்தின்பெயரால் திசைதிருப்பி வகுப்பு கலவரத்தை தூண்டி விடுகிறது.  கடந்த பத்தாண்டு கால மோடி தலைமையிலான பாஜக அரசின் நடவடிக்கைகள், நாட்டின் அமைதியை சீர்குலைத்துள்ளது என்பதை இந்திய உழைக்கும் மக்கள் உணர துவங்கிவிட்டனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை அதிகாரத்தில் இருந்து அகற்றுவார்கள். அடுத்து தலைநகர் தில்லியில் ஏற்றப்படும்  சுதந்திர தினக்கொடி, இந்திய மக்களின் ஒற்றுமையை பறை  சாட்டும் ஆட்சியின் அங்கமாக இருக்கும் தலைவர் ஏற்றுவார்.  “இந்தியா” அதற்காக உழைக்கும், “இந்தியா”விற்கு பின்னால் மக் கள் அணிதிரள்வார்கள், என்றார்.