tamilnadu

2 ஆயிரம் போலி பான் கார்டுகள் தயாரித்த 6 பேர் கைது

2 ஆயிரம் போலி பான் கார்டுகள் தயாரித்த 6 பேர் கைது'

கோவை, மே 9– கடந்த ஐந்து ஆண்டுகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி பான் கார்டுகளைத் தயாரித்து விற் பனை செய்த கும்பலை கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீ சார் அதிரடியாக கைது செய்தனர்.  கரூரில் ஒரு கும்பல் போலி பான் கார்டுகளை தயாரித்து வருவதாக பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு தக வல் கிடைத்தது. உடனடியாக காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங் குள்ள ஒரு அறையில் போலி பான் கார்டுகளை தயாரித்துக் கொண்டி ருந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். கைது செய்யப் பட்ட நபர்கள் கரூரைச் சேர்ந்த ஜெயக் குமார், கார்த்திக், நவீன சேகர், சம் பத், சீனிவாசன் மற்றும் கலைவாணி என்பது விசாரணையில் தெரியவந் தது. இந்த ஆறு பேரும் இணைந்து  போலி பான் கார்டுகளை தயாரித்து, அவற்றை பயன்படுத்தி ஆதார் கார்டு  எடுக்க விண்ணப்பித்தது கண்டறியப் பட்டது. இதையடுத்து, போலீசார் அந்த ஆறு பேரையும் கைது செய்து  கரூர் காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். அவர்களிடம் இருந்து 130 போலி பான் கார்டுகள், 69 போலி ஆவணங்கள், ஒரு மடிக்கணினி, ஆறு செல்போன்கள் மற்றும் போலி பான் கார்டுகள் தயாரிக்க பயன்படுத் தப்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “கைது செய்யப்பட்ட கும்பல் கடந்த ஐந்து ஆண்டுகளாக போலி பான் கார்டு தயாரிப்பு மோச டியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர் கள் முதலில் போலியாக பான் கார்டு களை தயாரித்து, பின்னர் சில போலி யான ஆவணங்களை இணைத்து  ஆதார் கார்டு பெற விண்ணப்பித் துள்ளனர். அந்த ஆதார் கார்டை  பயன்படுத்தி மீண்டும் பான் கார்டுக்கு விண்ணப்பித்து பெற்றுள்ளனர். இதே முறையை பின்பற்றி, முதலில் போலி ஆவணங்களை பயன்படுத்தி பின்னர் உண்மையான ஆதார் மற் றும் பான் கார்டுகளையும் பெற்றுள்ள னர்” என்று தெரிவித்தனர். மேலும், கடந்த ஐந்து ஆண்டுக ளில் மட்டும் இந்த கும்பல் சுமார் 2 ஆயிரம் பேருக்கு போலி ஆவணங் கள் மூலம் ஆதார் மற்றும் பான் கார்டு களை பெற்று கொடுத்துள்ளனர். இதில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த வர்கள் அதிகளவில் உள்ளனர். ஒரு  கார்டுக்கு ரூபாய் ஐந்தாயிரம் வரை இவர்கள் கட்டணமாக வசூலித்துள் ளனர். இந்த கும்பலுடன் வெளி மாநில நபர்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட் டது, எந்த முகவரியை பயன்படுத்தி அவர்களுக்கு ஆதார் கார்டு வாங்கி  கொடுக்கப்பட்டது, இந்த மோசடி யின் பின்னணியில் உள்ளவர்கள் யார், அவர்களுக்கு வேறு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, என்றனர்