tamilnadu

img

ஒரே நேரத்தில் திருக்குறள் வாசித்த 5 ஆயிரம் மாணவர்கள்

கோவை கொடிசியா வளாகத்தில் 6வது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகின்றது. மாவட்ட நிர்வாகம், கொடிசியா, தென்னிந்திய பதிப்பாளர்கள் இணைந்து நடத்தும் புத்தக திருவிழா வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.  இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவிகள் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும்  "திருக்குறள் திரள்  வாசிப்பு" நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது.

கோவை மாநகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 5 ஆயிரம் பேர் கொடிசியா வளாகத்தில் திரண்டனர். அப்போது திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் 2 குறள்கள் என 10 அதிகாரங்களிலிருந்து 20 குறள்களை மாணவ மாணவிகளும் திரளாக வாசித்தனர்.

ஆசிரியர்கள் சொல்லச் சொல்ல திருக்குறள் வாசிக்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் அக்குறளுக்கான விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள திருக்குறள் புத்தகத்தில் அடையில் அச்சிடப்பட்ட திருவள்ளுவர் புகைப்படம் காவி நிறத்தில் இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.