4 ஆயிரம் கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
குமாரபாளையம் அருகே வாகனச் சோதனையில் 4 ஆயிரம் கிலோ ஜெலட்டின் குச்சிகளை தனிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த சரக்கு வாகனத்தை, தனிப் படை போலீசார் சனியன்று மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். அப்போது, போலீசாரை கண் டதும் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங் கிருந்து தப்பியோடி விட்டார். இதன்பின் அந்த வாகனத்தில் போலீசார் சோதனை செய் ததில், குவாரிகளுக்கு பயன்படுத்தும் ஜெலட் டின் குச்சிகள் அதிகளவில் சரக்கு வாகனத் தில் இருந்து இருந்தன. அவை 4 ஆயிரம் கிலோ எடை இருக்க வாய்ப்புள்ளது. அனுமதி யின்றி அவற்றை ஓட்டுநர் எடுத்து வந்தது தெரியவந்துள்ளது, என காவல் கண்காணிப் பாளர் ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளார்.