உதகை, ஜூலை 5- அம்பலமூலாவில் தோழர் வி.டி.ஆர் நினைவகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வியாழனன்று அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த செப்டம் பரில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவரான தோழர் ”வி.டி.ரவீந்திரன் நினைவகம்“ என அலுவ லகம் கட்டுவது என்று எடுக்கப்பட்ட முடி வின்படி அலுவலக கட்டுமானப் பணிகளை நவம்பர் 11 அன்று மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் துவக்கி வைத்தார். கடந்த 6 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட கட்ட டத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். அலுவலகத்தைப் பசுமை அலுவலகமாக பராமரிப்பது என்ற முடிவின் படி அலுவல கத்தை சுற்றிலும் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் டி.ரவீந்திரன் தென்னங்கன்றுகளை நட்டு வைத்தார். இதனையடுத்து தோழர் வி.டி.ரவீந்திரன் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.2லட்சம் தொகையும் வழங்கப்பட்டது. அலுவலகத் திறப்பு விழாவின்போது மாவட்ட மையத்தின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட புதிய வாகனத்தின் சாவியை ஜி.ராமகிருஷ்ணன் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரனிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேரவை கூட் டத்தில் நெல்லை தோழர் அசோக் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.20 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை கட்சி உறுப்பினர்கள் அளித்தனர். இந்நிழகழ்வுகளில் மாநிலக்குழு உறுப்பினர் பத்ரி உள்ளிட்ட மாவட்ட செயற் குழு, மாவட்டக்குழு உறுப்பினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.