tamilnadu

img

தடாகம் பகுதியில் தடையை மீறி கனிம வளம் கடத்தல்

அதிகாரிகளின் உத்தரவை புறந்தள்ளும் கொள்ளையர்கள்

கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் 204 செங்கல் சூளைகள் இயங்கி  வருகின்றன. செங்கல் சூளைகளுக் கான செம்மண் சுற்று வட்டார கிரா மங்களில் தோண்டி எடுத்து பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சின்னதடாகம், பன்னிமடை, நஞ் சுண்டாபுரம், வீரபாண்டி, சோமையம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி செம்மண் எடுக் கப்படுவது தொடர் கதையாக உள் ளது. விளை நிலங்கள், அரசு புறம் போக்கு நிலங்கள் மட்டுமின்றி நீர் நிலைகளையும் விட்டு வைக்காமல் மண் வளம் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருகிறது. கனிமவள விதிப்படி அனுமதி பெற்ற அரசு நிலங்களாக இருந்தா லும், தனியார் நிலங்களாக இருந்தா லும் 3 அடி அழத்துக்குள் மட்டுமே மண் எடுக்க வேண்டும். கனரக வாக னங்களை பயன்படுத்த கூடாது. பக்கத்து நிலங்களுக்கு சேதம் ஏற் படாத வகையில் போதிய இடை வெளியில் மண் எடுக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் மட்டுமே மண் எடுக்க வேண்டும் உள்ளிட்ட சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகிறது.  இந்த கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து பெரியநாயக்கன் பாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் கனிமவள கொள்ளையை கண்டித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு 24 மணி நேர தொடர் பிரச்ச ராம் நடைபெற்றது. அப்போது நட வடிக்கை எடுப்பது போன்ற ஒரு நாடகத்தை மாவட்ட நிர்வாகம் மேற் கொண்டது. ஒரு சில மாதங்கள் கனிம வள கொள்ளை நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இக்கொள்ளை உச்சத்திற்கு சென்றுள்ளது. 

தற்போது விவசாய நிலங்கள் இருந்த இடங்கள் மிகப்பெரிய பள்ளங் களாக மாறி வருவதால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, விவசாயம் முடங்கியுள்ளது. நிலம் மற்றும் நீர் வளம் மிகுந்த பகுதியில் 20 அடி முதல் 150 அடி வரை தோண்டி செம்மண் எடுக்கப்படுவதால், ஊர்  முழுக்க பள்ளங்களாகவும், குழிகளாக வும் மாறியுள்ளதாகவும், மேலும், இந்த கனிம வள கொள்ளைக்கு அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதி களுக்கு தொடர்பு இருப்பதாக கிராம மக்கள் தொடர்ச்சியாக புகார் தெரி வித்து வந்தனர்.  இந்நிலையில் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், கோவை மாவட்ட ஆட்சியருக்கு சமீபத்தில் எழு திய கடிதத்தில் தடாகம் சுற்றுவட் டார பகுதியில் 20 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அரசு அனுமதி யின்றி செயல்பட்டு வருவதாகவும், இச்சூளைகள் வனத்தினை ஒட்டி சுமார் 3 முதல் 8 மீட்டர் ஆழத்திற்கு குழிகள் தோண்டி செம்மண் எடுக் கப்பட்டு வருகிறது. இந்த தடாக பள்ளத்தாக்கினை சுற்றி அமைந் துள்ள காப்புக்காடானது அதிக சரிவுப் பகுதிகளாகவும், சரிவு பகுதி முடிந்தவுடன் பட்டா நிலங்களும், வருவாய் நிலங்களும் அமைந்துள்ளது. இப்பட்டா நிலங்களில் சூளைகள் அமைத்து ஆழமான குழி தோண்டி செம்மண் எடுக்கப்பட்டு வருவதால் வனப்பகுதியில் ஓர் இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு செல்லும் யானைகள் சரிவுப்பகுதியில் செல்ல முடியாத காரணத்தினால் ஊருக்குள் செல்கிறது. இக்குழிகளுக்குள் யானை கள் விழுந்து காயம் மற்றும் உயிரி ழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. யானை கள் கிராமங்களுக்குள் புகுந்து யானை - மனித மோதல்கள் ஏற்பட்டு பொது மக்களின் உயிருக்கும், உடமைக்கும் சேதம் ஏற்படுத்தி வருகிறது. இதனால் தடாகம் பள்ளத்தாக்கு பகுதிகளில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆழத் தினை விட அதிகமான ஆழத்திற்கு செம்மண் எடுக்கும் செங்கல் சூளைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளு மாறு கடிதத்தில் பரிந்துரைந்துள்ளார்.  ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு மாவட்ட வன அலுவலர், மாவட்ட ஆட்சியருக்கு இதேபோல் ஒரு கடிதம் எழுதியுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, செங்கல் சூளைகள் எதுவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறவில்லை எனவும், இரும்பு செட் அமைத்து இயங்கும் சூளைகளுக்கு மின் இணைப்புகள் வழங்கவில்லை எனவும் பதில் வந்துள்ளது. சின்னத்தடாகம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜேந்திரன் என்ப வர் அளித்த புகாரின் பேரில், தணிக்கை  மேற்கொண்டு அறிக்கை அனுப்பு மாறு கோவை வடக்கு வட்டாட்சிய ருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட் டுள்ளார். வனத்துறை கடிதம் தொடர் பாக மாவட்ட நிர்வாகம் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இது வனத்துறை அரசின் துறையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என வும் சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப் பியுள்ளனர்.

மேலும், அனுமதியில்லாமல் இயங் கும் செங்கல் சூளைகளாலும், விதி முறைகளை மீறி மண் எடுக்கபடுவ தாலும் மனிதர்களுக்கும், வனவிலங் களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 40 நாட்களில் 4 யானைகள் உயிரிழந்துள்ளன எனவும், யானை கள் இறப்பிற்கான முழுமையான கார ணங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியு றுத்தியுள்ளனர். விதிமுறைகளை மீறி நடைபெறும் கனிம வளக் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 அ.ர.பாபு