கோவை, மே 26–தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த குறைதீர் கூட்டம் திங்களன்று வழக்கம் போல் நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததையடுத்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரக்கத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று (மே 27) முதல் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.