tamilnadu

img

டிக்கெட் கவுண்டர் ஓரிடம்; ரயில் ஓரிடம் அவதியுறும் ரயில் பயணிகள்

மேட்டுப்பாளையம், நவ.16- கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் ரயில்நிலையத்தில் டிக்கெட் வாங்கிய பின் ஒரு கிலோமீட்டர் தொலை விற்கு நடந்து சென்று ரயிலில் ஏற வேண்டி யுள்ளதால் பயணிகள் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.  மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி காலை 8.15, 10.40 மதியம் 1.00, மாலை  4.35 என நான்கு முறை கோவைக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வரு கிறது. ரயில்நிலையத்தின் முதலாவது நடை மேடையில் நிற்கும் இந்த ரயிலின் இன் ஜினை ஒவ்வொரு முறையும் மாற்றி அமைப் பதால் ஏற்படும் காலதாமதம் மற்றும் எரி பொருள் செலவை மிச்சப்படுத்த இந்த  பயணிகள் மின்சார ரயில் நவீன வசதி களுடன் கூடிய “மெமு” ரயிலாக அண்மை யில் மாற்றப்பட்டது.  இந்த மெமு ரயில் தற்போது மேட்டுப் பாளையம் ரயில் நிலையத்தில் உள்ள “1 ஏ” பிளாட்பாரத்தில் இருந்து இயக்கப் படுகிறது. மெமு ரயில் நிற்கும் இடத்திற்கும்,  இதற்கான டிக்கெட் வாங்கும் கவுண்ட ருக்கும் இடையே ஒரு கிலோமீட்டர் தூரம்  வரை இடைவெளி உள்ளது. இதனால் டிக் கெட் வாங்கிய பின்னர் இந்த பயணிகள் மெமு ரயிலில் ஏறி பயணிக்க அனைவரும் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல  வேண்டியுள்ளது. இதனால் வயதான வர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும்  இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். முன் கூட்டியே வரும் பயணிகள் நிழல் கூரை யில்லாத இந்த ஒரு கிலோமீட்டர் தொலைவு  பிளாட்பாரத்தில் வெயிலில் காத்திருக் கின்றனர். மழை பெய்தால் ஒதுங்கக் கூட இடமின்றி நனைந்து தவிக்கின்றனர். இந்த இடைப்பட்ட பகுதியில் கழிவறை மற்றும் குடிநீர் வசதிகளும் இல்லை.  தினசரி சென்னையில் இருந்து அதி காலையில் வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்  மாலை வரை முதல் நடைமேடையில் நிறுத் தப்படுவதால் பயணிகள் ரயிலை இதற் கடுத்த பிளாட்பாரத்தில் நிறுத்த வேண்டி யுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரி விக்கப்படுகிறது. எளிதில் சென்றடையும் வகையில் பயணிகள் ரயிலை நிறுத்த மாற்று  ஏற்பாடு செய்ய வேண்டும். மெமு ரயில்  நிறுத்தப்படும் பிளாட்பாரத்தில் நிழற் கூரை, கழிவறை மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.  (ந.நி)