tamilnadu

பிஎஸ்என்எல் பிரச்சனைகளுக்கு விருப்ப ஓய்வு திட்டம் மருந்தல்ல - பி.அபிமன்யு

பிஎஸ்என்எல்-ல் விருப்ப ஓய்வு திட்டத்தை அமலாக்க மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற, தொலைத் தொடர்புத் துறை தேர்தல் ஆணையத்தை அணுகும் என பத்திரிகை செய்திகள் வெளி வந்துள்ளன. தொலைத் தொடர்புத் துறையின் இந்த முயற்சியினை பிஎஸ்என்எல்- ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. அதிகப்படியான ஊழியர்களால் தான் பிஎஸ்என்எல்- பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது என தொலைத் தொடர்புத்துறை ஒருசித்திரம் வரைய முயற்சிக்கிறது. உண்மையென்னவென்றால், அரசாங்கத்தின் ஜியோ ஆதரவு பிஎஸ்என்எல்- விரோத கொள்கைகள் தான் பிஎஸ்என்எல்-ன் நெருக்கடிக்கு காரணம். தற்போது இருப்பதை விட ஒரு லட்சம் ஊழியர்கள் அதிகமாக இருந்த 2004ஆம் ஆண்டில்,இதே பிஎஸ்என்எல்-, 10,000 கோடி ரூபாய்களை நிகர லாபமாக பெற்றது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.  எனவே ஊழியர்களின் எண்ணிக்கைஎன்பது உண்மையான பிரச்சனை இல்லை. 


ஜியோவை எதிர்த்ததால் பழிவாங்கப்பட்ட அதிகாரி

எதார்த்தத்தில், 2014ஆம் ஆண்டிலேயே பிஎஸ்என்எல்- மீண்டெழத் துவங்கியது. 2014-15, 2015-16 மற்றும் 2016-17ஆம் ஆண்டுகளில் அது செயல்பாட்டு லாபத்தை சம்பாதித்தது.2016, செப்டம்பரில் ரிலையன்ஸ் ஜியோ தனதுசேவையை துவங்கிய பின்புதான் பிரச்சனை உருவானது. தனது பொருளாதார பலத்தைக்கொண்டு, கழுத்தறுப்பு விலை குறைப்பின் மூலம்தனது போட்டியாளர்களை அழிக்க முயற்சித்தது. ரிலையன்ஸ் ஜியோவின் கழுத்தறுப்புக்கு எதிராக இருந்த ஒரே காரணத்திற்காக, அப்பொழுது தொலைத்தொடர்புத் துறையின் செயலாளராக இருந்த ஜே.எஸ்.தீபக் அவர்கள் அசாதாரணமான முறையில் அந்த பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்..    ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பெரியஅளவில் உதவி புரிந்தது. முதலில், கழுத்தறுப்புவிலை குறைப்பு தொடர்பாக தான் 2003, மே மாதத்தில் தெரிவித்த விளக்கத்தை அதுவேமாற்றியது. இரண்டாவதாக 2017 அக்டோபர் மாதத்தில் ஐயுசி (ஐருஊ) கட்டணத்தை குறைத்ததன் மூலம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு 1000 கோடிரூபாய் அளவிற்கு ஆதாயத்தை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், பழைய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான வருவாய் இழப்பை ஏற்படுத்தியது. பிஎஸ்என்எல்- நிறுவனத்தை உருவாக்கும் போது, பிஎஸ்என்எல்-ன் நிதி ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என மத்திய அமைச்சரவை உறுதி அளித்திருந்தது. ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால், அரசாங்கம் சிற்றன்னை மனப்பாங்குடன் தான் பிஎஸ்என்எல்-ஐ நடத்துகிறது. பிஎஸ்என்எல்-ன் வளர்ச்சியை மிகப்பெரிய அளவில் பாதிக்கக் கூடிய வகையில், இன்று வரை அதற்கு 4ஜி அலைக்கற்றை வழங்கப்படாததே மிகச் சிறந்த உதாரணம். 


சிறகுகளை வெட்டும் திட்டமிட்ட சதி

2018, ஜனவரி மாதத்தில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹாஅவர்கள் பிஎஸ்என்எல்-க்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும் என பிஎஸ்என்எல்-ன் அனைத்து சங்கங்களிடம் உறுதி அளித்தார். ஆனால் உறுதி மொழி கொடுத்து ஒரு ஆண்டு காலத்திற்கு மேலாகியும், இந்நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பிஎஸ்என்எல்-க்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படாதது பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் சிறகுகளை வெட்டும் அரசின் திட்டமிட்ட சதி. 13,000 கோடி ரூபாய்கள் அளவிற்கு தான்பிஎஸ்என்எல்-ன் கடன் என்பது உள்ளது. உண்மையில் ஒட்டு மொத்த தொலைத் தொடர்பு தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிலேயே பிஎஸ்என்எல்-தான் குறைந்த கடன் உள்ள நிறுவனமாகும். ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்டஅனைத்து தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒரு லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் கடன் வைத்துள்ளன. அப்படி இருந்த போதும், வங்கிகளிடம் இருந்து கடனை பெற பிஎஸ்என்எல்-க்கு தொலைத் தொடர்புத் துறை தடை விதிக்கிறது. இதுவும் பிஎஸ்என்எல்-ன் வளர்ச்சியை தடுப்பதற்கான அரசின் தெளிவான நடவடிக்கைகளில் ஒன்று. நாடு முழுவதும் பிஎஸ்என்எல்-க்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள காலியிடங்கள் உள்ளன. இவற்றை வாடகைக்கு அல்லதுகுத்தகைக்கு விடுவதன் மூலம் நிதியை திரட்ட அரசின் ஒப்புதலை பிஎஸ்என்எல் - கோரியுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சமாக 5,000 கோடிரூபாய் நிதியினை ஆண்டொன்றுக்கு அதனால் திரட்ட முடியும். ஆனால் ஒருவருட காலமாக அதற்கான ஒப்புதலை தராமல் அரசு இழுத்தடித்துக் கொண்டுள்ளது.


ஜெட் ஏர்வேஸ் ஜெட்லியின் கருணை

சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காப்பாற்ற அரசாங்கம் எவ்வளவு வேகமாக செயல்பட்டது என்பதை நாடே பார்த்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காப்பாற்ற பாரத ஸ்டேட் வங்கி தலைமை தாங்கும் வங்கிகளை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு 1,500 கோடி ரூபாய்களை கொட்டி கொடுக்க மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி உத்தரவிட்டார். இத்தகைய கருணையை அரசுக்கு முழுமையாக சொந்தமான பிஎஸ்என்எல்-ன் மேல் இவர்கள் காட்ட வில்லை. கடந்த 18 ஆண்டுகாலமாக பிஎஸ்என்எல்- நிறுவனத்தின் இருத்தலுக்காக அரசாங்கம் ஒரு நயா பைசா கூட உதவவில்லை என்ற விஷயம் அனைவருக்கும் ஆச்சரியம் தரும் உண்மையாகும்.எம்டிஎன்எல் நிறுவனத்தில் இரண்டு முறை விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எம்டிஎன்எல்-ன் பொருளாதார புத்தாக்கத்திற்கு எந்த வகையிலும் பயன் தரவில்லை. அந்நிறுவனத்தின் பொருளாதார நெருக்கடி அதன் கழுத்து வரை உள்ளது. எனவேபிஎஸ்என்எல்-ன் பொருளாதார மீட்சிக்கு விருப்ப ஓய்வு திட்டம் பயன் எதுவும் தராது. அரசாங்கம் உண்மையில் பிஎஸ்என்எல்-ன் பொருளாதார மீட்சியை உறுதி செய்ய விரும்பினால், உடனடியாக அதற்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்க வேண்டும். தனது வலைத்தளங்களை விரிவாக்கம் செய்யவும், நவீனப்படுத்தவும் தேவையான மிதமான வட்டியுடன் கூடிய கடனை பிஎஸ்என்எல்-க்கு வழங்கிபொருளாதார உதவி செய்ய வேண்டும். தனதுகாலியிடங்கள் மூலமாக நிதி திரட்ட வேண்டும் என்கிற சங்கங்களின் கோரிக்கைக்கு ஒப்புதலைவழங்க வேண்டும்நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களின் மீது மிகப்பெரிய அளவிலான தாக்குதலை அரசாங்கம் தொடுத்து வரும் காலம் இது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் பிஎஸ்என்எல்-ஐ தனியார் மயப்படுத்த வேண்டும் என்பதே அதன் விருப்பம். தனியார் பெரு முதலாளிகளுக்கு இதனை தாரை வார்க்கதயார்படுத்தும் வகையில், நிறுவனத்தின் தொழிலாளர்களை குறைக்க வேண்டும் என்கின்றஅரசின் திட்டத்தின் ஒன்றாகத்தான் இந்த விருப்பஓய்வு திட்டத்தை நாம் பார்க்க வேண்டும். எனவே பிஎஸ்என்எல்-ல் விருப்ப ஓய்வு திட்டத்தை அமலாக்க முயற்சிக்கும் தொலை தொடர்புத் துறையின் நடவடிக்கைகளை பிஎஸ்என்எல்- ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. அரசாங்கத்தின் இந்த நாசகர முயற்சிகளுக்கு எதிராக போராட ஒத்த கருத்துடைய சங்கங்களைஎல்லாம் ஒன்று திரட்ட இந்த சங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

;