tamilnadu

img

லீ பஜார் பாலத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுத்திடுக

மளிகை மற்றும் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

சேலம், செப்.16- சேலம் மாநகர மைய பகுதியாக இருக் கும் தொழில் பகுதியான செவ்வாய்பேட்டை பகுதியில் அதிக வாகன நெரிசல் ஏற்படு வதால் கட்டிமுடிக்கப்பட்ட லீ பஜார் மேம் பாலத்தை உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டு மென சேலம் செவ்வாய்பேட்டை மளிகை ஷாப் வர்த்தக நல சங்கம் வலியுறுத்தி யுள்ளது. சேலம் செவ்வாய்பேட்டை வர்த்தக சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் ஞாயி றன்று நடைபெற்றது. இதில் சேலம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து  நிலையங்களில் இருந்து பால் மார்க்கெட், லீ பஜார், செவ்வாய்பேட்டை, தேர் நிலை யம் ஆகிய பகுதிகளுக்கு அனைத்து பைபாஸ்-களிலிருந்தும் ஷேர் ஆட் டோக்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் அனைத்து சாலைகளும் பழுதான நிலையில் அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் லீ பஜார் மேம்பால பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்த நிலையில், அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, இக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் எஸ்.சி.நடராஜன், செயலாளர் என். தர்மலிங்கம், பொருளாளர் கே.முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.