சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி மனு
சேலம், செப். 23- பொது இடத்தில் 30 ஆண்டுக்கு மேல் இருந்த மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சேலம் மாநகரம் 26 ஆவது கோட்டம் சாமிநாதபுரம் அந்தோணிசாமி தெருவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சாலை யோரம் மாநகராட்சி இடத்தில் புங்க மரங் கள் இருந்து வந்தது. இதனை கடந்த 20 ஆம் தேதியன்று ஏழு பேர் கொண்ட ஒரு கும்பல் முற்றிலுமாக இயந்திரங்களை வைத்து வெட்டி எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக் கள் மற்றும் இளைஞர்கள் மரம் வெட்டிய வர்களை சிறைபிடித்து வாகனத்துடன் காவல்துறையில் ஒப்படைத்தனர். ஆனால், இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்ட வர்கள் மீது காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், பொது இடத்தில் மாந கராட்சிக்கு சொந்தமான மரங்களை வெட்டி யவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகர செயலா ளர் என்.பிரவீன்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சேலம் மாநக ராட்சி ஆணையாளரிடமும் மனு அளிக் கப்பட்டது. இம்மனுவினை அளிக்கையில் வடக்கு மாநகர குழு உறுப்பினர்கள் வி.வெங்கடேஷ், எம்.செந்தில், பி.சதிஷ் குமார், ஆர்.புருஷேத்தாமன், எம்.வெங்க டேஷ், ஆர்.சசிகுமார், கே.நாகராஜ் உள் ளிட்ட பலர் உடனிருந்தனர்.