தென் மண்டல அளவில்
மேட்டுப்பாளையம், அக்.10- மேட்டுப்பாளையம் அருகே தென் மண் டல அளவில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக் கிடையேயான நீச்சல் போட்டியில் 1200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 370 புள்ளிகள் பெற்று சென்னை செட்டி நாடு வித்யாஸ்ராம் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் அருகே தனியார் (ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி) பள்ளியில் தென் மண்டல அளவில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடை யேயான நீச்சல் போட்டிகள் கடந்த 6 ஆம் தேதியன்று தொடங்கியது. இப் போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச் சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிங்களில் இருந்து சுமார் 1,200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், 11,14,17 மற்றும் 19 வயதுக்குட்பட் டோர் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத் தப்பட்டன. போட்டிகளின் நிறைவு நாள் மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகள் வெள் ளியன்று நடைபெற்றன. இப்போட்டிகளில் சென்னை செட்டி நாடு வித்யாஸ்ராம் பள்ளி 370 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத் தைப் பெற்று முதலிடத்தையும், சென்னை எஸ்.பி.ஓ.ஏ.பள்ளி 168 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும், ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி 164 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தை யும் பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தேசிய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையும், சர்வ தேச யோகா பயிற்சியாளருமான எம்.ஸ்ரீஷா பரிசுகளை வழங்கி பேசினார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் இந்திய நீச்சல் குழுவின் தலைமை பயிற்சியாளர் கே.கே. முகுந்தன், இந்திய நீச்சல் பயிற்சி கூட்டமைப்பின் முன்னாள் பயிற்சியா ளர் ஜாய் ஜோசப்,உடற்கல்வி இயக்குனர் சி.பி.சண்முகநாதன், நிர்வாக அறங்கா வலர் மணிமேகலை மோகன்தாஸ், செய லர் மோகன்தாஸ் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.